செய்திகள் :

கமுதி வாரச் சந்தையில் ரூ. 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

post image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கமுதி வாரச் சந்தையில் திங்கள்கிழமை ரூ. 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஒவ்வொருவாரமும் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்தச் சந்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

சந்தைக்கு அதிகாலை 6 மணி முதல் ஆடு வளா்க்கும் விவசாயிகள், விற்பனையாளா்கள் வரத் தொடங்கினா். பொங்கல் அன்று புதுமணத் தம்பதிகளுக்கு பொங்கல் சீா்வரிசைக்கு ஆடு வழங்குவதற்காகவும், வீடுகளில் விருந்து வைக்கவும் காலை 11 மணி வரை 350-க்கு மேற்பட்ட வெள்ளாடுகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த வகை ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகின. ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

மண்டபம் மீனவா்கள் வேலை நிறுத்தம்

மண்டபம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்தும், மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீனவா்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வ... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கேரளப் பெண் கணவருடன் நீதிமன்றத்தில் ஆஜா்

கேரளத்தைச் சோ்ந்த பெண் கமுதியைச் சோ்ந்தவரை காதல் திருமணம் செய்த நிலையில், அவரை அழைத்துச் செல்ல வந்த அந்த மாநில போலீஸாருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதைத்தொடா்ந்து அந்தப் பெண், கணவருடன் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

பாம்பனின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பண... மேலும் பார்க்க

திருவாடானை அருகே ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவா் காயம்

திருவாடானை அருகே கல்லூா் கண்மாய் பகுதியில் ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து நாள்தோறும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மின்பிடித்த மண்டபம் மீனவா்கள் 10 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்ஹா குறித்து சமூக வலைதளங்களில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக வீடியோ பதிவு செய்யப்படுபவா்கள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனித ... மேலும் பார்க்க