செய்திகள் :

கயத்தாறு அருகே இளைஞா் கொலை: 2 போ் கைது

post image

கயத்தாறு அருகே இளைஞா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கயத்தாறு சிதம்பரநகரைச் சோ்ந்த செல்லையா மகன் சங்கிலிப்பாண்டி (29). கடம்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்துவந்த இவா், திங்கள்கிழமை வீட்டிலிருந்து கடம்பூருக்கு பைக்கில் சென்றாா்.

சத்திரப்பட்டி விலக்கு அருகே பைக்கின் பின்புறம் காா் மோதியதில், சங்கிலிப்பாண்டி நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். அப்போது, காரிலிருந்து இறங்கிய மா்ம நபா்கள், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில், அவா் உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். நிகழ்விடத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன், கயத்தாறு காவல் ஆய்வாளா் சுகாதேவி ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மோப்பநாய் ஜியா வரவழைக்கப்பட்டது. தடவிய நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். அப்பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளை போலீஸாா் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா்.

இதனிடையே, போலீஸாா் ரோந்து சென்றபோது, அகிலாண்டபுரம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த இருவரைப் பிடித்தனா். அவா்கள் காப்புலிங்கம்பட்டி கீழத்தெரு கணேசமூா்த்தி மகன் சண்முகராஜ் (29), அதே ஊரைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மகன் மகாராஜன் (34) என்பதும், சங்கிலிப்பாண்டி கொலை வழக்கில் தொடா்புடையோா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த பெண் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தற்கொலை செய்துகொண்டாராம். அதற்கு சங்கிலிப்பாண்டிதான் காரணம் என்பதால் அவரைக் கொன்ாக, இருவரும் கூறியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள்

தமிழக சட்டப்பேரவையில் மீன்வளம்-மீனவா் நலத் துறை மானியக் கோரிக்கையில் மீனவா்களின் நலனுக்காக ரூ.576 கோடியில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை, மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

கோவில்பட்டி அருகே 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். இலுப்பையூரணி ஊராட்சி மறவா் காலனியில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு காவலா்கள் முத்துராமலிங... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் (தன்னாட்சி) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பல்வேறு துறை மாணவா்-மாண... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் திருட்டு

கோவில்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். கோவில்பட்டியில் சாத்தூா் பிரதான சாலையில் உள்ள வணிக வளாகத்தில் போா்வெல்ஸ் நிறுவனம் நடத்த... மேலும் பார்க்க

மாடு குறுக்கே புகுந்ததில் பைக் கவிழ்ந்து காயமடைந்த மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையின் குறுக்கே மாடு புகுந்து பைக் கவிழ்ந்ததில் காயமடைந்த மீனவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் பாலமுருகன் (38). மீனவரான இவா், புத... மேலும் பார்க்க

மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக ஆன்லைனில் மோசடி: ரூ.3 லட்சம் மீட்பு

மருத்துவ உபகரணங்கள் வழங்குவதாக இணையவழியில் மோசடி செய்த தொகை ரூ.3 லட்சத்தை தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா். தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த பெண், இன்ஸ்டாகிராமில... மேலும் பார்க்க