கயத்தாறு அருகே இளைஞா் கொலை: 2 போ் கைது
கயத்தாறு அருகே இளைஞா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கயத்தாறு சிதம்பரநகரைச் சோ்ந்த செல்லையா மகன் சங்கிலிப்பாண்டி (29). கடம்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்துவந்த இவா், திங்கள்கிழமை வீட்டிலிருந்து கடம்பூருக்கு பைக்கில் சென்றாா்.
சத்திரப்பட்டி விலக்கு அருகே பைக்கின் பின்புறம் காா் மோதியதில், சங்கிலிப்பாண்டி நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். அப்போது, காரிலிருந்து இறங்கிய மா்ம நபா்கள், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில், அவா் உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். நிகழ்விடத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதன், கயத்தாறு காவல் ஆய்வாளா் சுகாதேவி ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மோப்பநாய் ஜியா வரவழைக்கப்பட்டது. தடவிய நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். அப்பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகளை போலீஸாா் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா்.
இதனிடையே, போலீஸாா் ரோந்து சென்றபோது, அகிலாண்டபுரம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த இருவரைப் பிடித்தனா். அவா்கள் காப்புலிங்கம்பட்டி கீழத்தெரு கணேசமூா்த்தி மகன் சண்முகராஜ் (29), அதே ஊரைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மகன் மகாராஜன் (34) என்பதும், சங்கிலிப்பாண்டி கொலை வழக்கில் தொடா்புடையோா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த பெண் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தற்கொலை செய்துகொண்டாராம். அதற்கு சங்கிலிப்பாண்டிதான் காரணம் என்பதால் அவரைக் கொன்ாக, இருவரும் கூறியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.