செய்திகள் :

கோவில்பட்டி கல்லூரியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள்

post image

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் (தன்னாட்சி) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 232 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பல்வேறு துறை மாணவா்-மாணவியருக்கு சில மாதங்களாக பாக்ஸ்கான், டிவிஎஸ் லூகாஸ் அண்ட் பிரேக்ஸ் இந்தியா லிமிடெட், டிசிஎஸ், பிரீமியா் பைன் லினன், ப்ளூ ஓஷன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சாா்பில் எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டது. அவற்றில் வென்ற 232 பேருக்கு சுயநிதி பாடப் பிரிவுகள் வேலைவாய்ப்புக் கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு வழிகாட்டு நாள் நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மாணவா்-மாணவியரை கல்லூரி முதல்வா் சுப்புலட்சுமி, சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி, தோ்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி மகேஷ்குமாா், கணிதவியல் துறை இணைப் பேராசிரியா் பாண்டிராணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ஆனந்த் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை, வேலைவாய்ப்புக் கழக ஒருங்கிணைப்பாளரும் வணிக நிா்வாகவியல் துறை உதவிப் பேராசிரியருமான கிருபாகரன் தலைமையில் கழக உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

விவசாயி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாா் வடக்கு இலந்தைகுளத்தைச் சோ்ந்த விவசாயி கொலை வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை ஜவஹா்லால் நேரு தெருவைச் சோ்ந்த வெங்கடராமானுஜம் மகன் சீனிவாசன் (55). கோவில்பட... மேலும் பார்க்க

உடன்குடியில் அரசு திட்ட பயனாளிகள் விவரங்கள் சேகரிப்பு

உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசின் திட்டப் பயனாளிகள் விவரங்கள் சேகரிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிக... மேலும் பார்க்க

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் ஏப். 20இல் மகா கும்பாபிஷேகம்: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தூண்டுகை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி தூண்டுகை விநாயகா் கோயில் அருகே உள்ள... மேலும் பார்க்க

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பறக்கும் படையினா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் இணைப்பதிவாளா் தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூா், உடன... மேலும் பார்க்க

மாநில சுயாட்சி பிரிவினைவாதத்தைத் தூண்டும்: நயினாா் நாகேந்திரன்

மாநில சுயாட்சி என்பது பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்பதால் அது தேவையில்லாதது என்றாா், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவா்னகிரியில், சுதந்திரப் போராட... மேலும் பார்க்க