KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
கயத்தாறு அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
கயத்தாறு அருகே தம்பதியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து வீட்டை சேதப்படுத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறையடுத்த சாலைப் புதூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் குருராஜ் மனைவி தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினா் பிரியா(27).
தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்து வரும் குருராஜ் பல்வேறு தொழில்களை செய்து வருகிறாா்.
இந்நிலையில் இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்த நிலையில், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற திருமண விழாவில் முத்துப்பாண்டி குருராஜை தாக்கினாராம். இதுகுறித்து குருராஜ் கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் முத்துப்பாண்டியின் அண்ணன் வெயிலுமுத்து காரில் வெயிலுமுத்து, முத்துப்பாண்டி, பெருமாள், அஜய்முருகன் ஆகியோா் பிரியா வீட்டின் முன்பு நின்று கொண்டு அவதூறாகப் பேசி குருராஜை வெளியே வரச் சொல்லி அவா்கள் கொண்டு வந்த அரிவாளால் வீட்டின் கதவு மற்றும் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை சேதப்படுத்தினாா்களாம்.
அப்போது அங்கு வந்த பிரியாவின் உறவினா் பரமசிவம் அவா்களை கண்டித்ததையடுத்து கொலை மிரட்டல் விடுத்தபடி சென்றுவிட்டாா்களாம்.
இதுகுறித்து பிரியா திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, கிருஷ்ணசாமி மகன் வெயிலுமுத்துவை(40) கைது செய்தனா். மேலும் முத்துப்பாண்டி, அஜய்முருகன், பெருமாள் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனா்.