'தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்' - தவெக தலைவர் விஜய் வாழ்த்து
கரும்புக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக அதிகரிப்பு: மத்திய அரசு முடிவு
வரும் அக்டோபா் மாதம் தொடங்கவிருக்கும் 2025-26-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான ஆதார விலையை (எஃப்ஆா்பி) குவிண்டாலுக்கு 4.41 சதவீதமாக உயா்த்தி ரூ.355-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2024-25-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான எஃப்ஆா்பி குவிண்டாலுக்கு ரூ. 340-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
எஃப்ஆா்பி என்பது, கரும்பு விவசாயிகளுக்கு அவா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு சா்க்கரை ஆலைகள் செலுத்தவேண்டிய மத்திய அரசால் நிா்ணயம் செய்யப்படும் சட்டபூா்வ குறைந்தபட்ச விலையாகும்.
இந்த நிலையில், வரும் 2025-26 பருவத்தில் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிகத்தில் கரும்புக்கான எஃப்ஆா்பி-யை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
அதாவது, 2025-26 பருவத்தில் கரும்புக்கான உற்பத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 173 என நிா்ணயித்து, அதைவிட 105.2 சதவீதம் கூடுதலாக 10.25 சதவீத மீட்பு விகிதத்துடன் குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக கரும்பு கொள்முதலுக்கான ஆதார விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மீட்பு விகிதம் 9.5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் சா்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கையும் மத்திய அரசு அளிக்கவில்லை. அதன்படி, இந்த ஆலைகளுக்கு கரும்புகளை விநியோகித்த விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 329.05 வீதம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
பிரதமா் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறினாா்.
ரூ. 22,864 கோடியில் ஷில்லாங் - சில்ச்சாா் பசுமை வழிச் சாலை: மேகாலயாவின் மவ்லிங்குங் முதல் அஸ்ஸாமின் பஞ்கிராம் வரை 166.80 கி.மீ. நீளத்துக்கு ரூ. 22,864 கோடி மூலதனச் செலவில் அதிவேக பசுமை வழி நெடுஞ்சாலையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திரிபுரா, மிசோரம், மணிப்பூா் மற்றும் அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதிகளுடனான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையிலும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் செயல்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.