செய்திகள் :

கரூரில் 40 பேர் உயிரிழப்புக்கான முக்கிய காரணம் என்ன? தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கம்!

post image

கரூர்: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 40 பேர் உயிரிழக்க காரணம் என்ன? என்பதை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் விளக்கியுள்ளார்.

கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் மயக்கமடைந்து பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் ராஜகுமாரி ஞாயிற்றுக்கிழமை(செப். 28) இரவு பார்வையிட்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வேலுச்சாமிபுரம் சம்பவத்தில் இறந்தவர்கள் உடல்களை பிரதேச பரிசோதனை செய்து உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டோம். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்த வரை மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் இரண்டு பேர் நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்.

உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில், பெரும்பாலானவர்கள் உயிரிழப்புக்கு காரணம் மூச்சு திணறல் என்பது உறுதியாகி உள்ளது.

உடற்கூறு ஆய்வுக்கு மட்டும் பதினாறு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 60 முதல் 70 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், இவர்களைத் தவிர சேலம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது தவிர, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்றார்.

Karur stampede: What is the main reason for the death of 40 people in Karur? Tamil Nadu Medical Education Director explains

விஜய் பிரசாரத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் மனு!

விஜய் பிரசாரத்துக்கும் பொதுக்கூடங்களுக்கும் அனுமதியளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.கரூரில் விஜய... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.தமிழ்நாடு முழுவதும் இன்று(செப். 28) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ... மேலும் பார்க்க

விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதன... மேலும் பார்க்க

கரூர் பலி: முதல்வரிடம் தொலைபேசியில் விசாரித்த ராகுல் காந்தி!

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விசாரித்தார். இதனை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் குறிப்ப... மேலும் பார்க்க

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன: கரூர் மாவட்ட ஆட்சியர்

அரசின் சிறப்பான நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு தெரிவித்தார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயி... மேலும் பார்க்க

கரூர் பலி: யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை - கனிமொழி

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில் யார் மீதும் பழி போடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு படுகா... மேலும் பார்க்க