விஜய் பிரசாரத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது: உயர்நீதிமன்றத்தில் மனு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று(செப். 28) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான பதவிகள்) மற்றும் 2 ஏ நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கான தோ்வு நடைபெற்றது.
எழுத்துத் தேர்வை 4,18,791 பேர் எழுதியதாகவும், 1.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்றும்,முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
மேலும், “குரூப் 4 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும். 2026-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி-யின் காலஅட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும்" என்றார்.