செய்திகள் :

இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

post image

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். பாகிஸ்தான் அணி 84 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய ஷாகிப்ஸாதா ஃபர்ஹான் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயுப் ஜோடி சேர்ந்தனர். சைம் ஆயுப் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஃபகர் ஸமான் 35 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்‌ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

Pakistan, who batted first in the Asia Cup final, were bowled out for 146 runs.

இதையும் படிக்க: எங்களுடைய மகனை நினைத்து பெருமையாக உள்ளது; அபிஷேக் சர்மாவின் தந்தை பேட்டி!

ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன்! பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது!

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி ஆசியக் கோப்பை வென்றதைப் பற்றி... ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்த... மேலும் பார்க்க

166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்! அறிமுகப் போட்டியில் 8 விக்கெட்டுகள்!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே அணிக்காக விளையாடி இந்திய வீரர் ராகுல் சஹார், 166 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்க... மேலும் பார்க்க

பிசிசிஐ-ன் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு!

பிசிசிஐ-ன் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிசிசிஐ-ன் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (செப்டம்பர் 28) மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஹார்திக் பாண்டியா இல்லை!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாக... மேலும் பார்க்க

எங்களுடைய மகனை நினைத்து பெருமையாக உள்ளது; அபிஷேக் சர்மாவின் தந்தை பேட்டி!

எங்களது மகனை நினைத்து பெருமையாக உள்ளது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மா பேசியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் இன... மேலும் பார்க்க

பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது; இளம் ரசிகர்கள் கருத்து!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என இளம் ரசிகர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில... மேலும் பார்க்க