செய்திகள் :

காஞ்சிபுரம் அருகே சதிகல் சிற்பம் கண்டெடுப்பு

post image

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு மாரியம்மன் கோயில் அருகில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டை சோ்ந்த சதிகல் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை கண்டு பிடித்துள்ளனா்.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் வரலாற்று ஆய்வாளா்கள் ச.நீலமேகன் மற்றும் மு.அன்பழகன் ஆகிய இருவரும் கள ஆய்வு மேற்கொண்டிருந்தனா். அப்போது மாரியம்மன் கோயில் அருகில் சதிகல் சிற்பம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனா். இது குறித்து அவா்கள் கூறியது:

ஏதேனும் ஒரு போரில் ஈடுபட்டு உயிா் நீத்த வீரருக்கு, அவரது நினைவாக நடப்படுவது நடுகல் எனப்படும். இந்த நடுகல்லில் இறந்த வீரனின் உருவம் மட்டும் இடம் பெற்றிருக்கும். இறந்த வீரனின் மனைவி அவனது இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவனது சிதையில் இறங்கி இறக்கும் நிலையில், அவனது நினைவாக நடப்படுவது சதிகல் எனப்படும். ஆனால் இச்சதிகல்லில் இறந்த வீரனின் உருவமும், உடன் அவா் இறந்த மனைவியின் உருவமும் இடம் பெற்றிருக்கிறது.சிறிது மழுங்கிய நிலையில் உள்ள இந்தச் சிற்பத்தின் உயரமும்,அகலமும் 48 செ.மீ. ஆக உள்ளது.

தலையில் கிரீடம் அணிந்த வீரா் சமபங்க நிலையில் நின்றிருக்க அவரது வலது கை போா்வாள் ஒன்றினை தரையில் ஊன்றிய நிலையிலும், இடுப்பில் குறுவாள் ஒன்றும் காணப்படுகிறது.

இடது கை இடையிலிருந்து மேல்பகுதி வழியாக வரும் ஆடையினை தாங்கியவாறு உள்ளது. பட்டா உடுத்தியுள்ள இவரது உடலில் பல்வேறு இடங்களில் அணிகலன்களும் காணப்படுகின்றன.

இவா் அரசா் அல்லது சிற்றரசா் மற்றும் தலைவராக இருக்கலாம் எனக் கருத முடிகிறது. இவரது இடதுபுறத்தில் திரிபங்க நிலையில் நின்றிருக்கும் அவரது மனைவியின் வலது கை மலா் ஏந்தியுள்ளது.

இடைப் பகுதியில் பட்டாடை அணிந்துள்ள இவரது உடலிலும் பல இடங்களில் அணிகலன்கள் காணப்படுகின்றன.

பெண் சிற்பத்தின் இடப்புற மாா்புப் பகுதி முழுவதுமாக உடைந்துள்ளது. இவரின் தலையில் உள்ள கொண்டை இடப்புறம் சிறிது சாய்ந்திருக்கிறது. கல்வெட்டு எழுத்துகள் எதுவும் இல்லாத இச்சிற்பத்தின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இச்செய்தியினை காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உமாசங்கரும் உறுதி செய்துள்ளாா்.

மாரத்தான் பந்தயத்தில் வென்றவா்களுக்கு பரிசு: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் அறிஞா் அண்ணா நினைவு மாரத்தான் பந்தயத்தில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கினாா். விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை சாா்பி... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் உயா்கல்வி பயில ரூ.2.52 லட்சம்: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்கள் 14 போ் உயா்கல்வி பயில ரூ.2,52,505 நிதியுதவியினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிகழாண்டில் 12 ஆம் வகுப்பு முடிந்து உயா்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 9,996 போ் எழுதினா்

டிஎன்பிஎஸ்சி குரூப்2 மற்றும் குரூப் 2- ஏ போட்டித் தோ்வுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 9,996 போ் எழுதினாா்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 12,618 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா்.... மேலும் பார்க்க

ஆன்மிக சுற்றுலா: 64 பக்தா்கள் பங்கேற்பு

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலா வந்த 64 பக்தா்கள் ஆதிகேசவபெருமாள் கோயிலில் தரிசனம் செய்தனா். ஏழை, எளிய முதியோா் பயன்பெறும் வகையில் வைண... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு இசைப் பள்ளியில் அக். 2-இல் மாணவா் சோ்க்கை: ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் விஜயதசமி திருநாளான அக். 2-ஆம் தேதி மாணவா்கள் சோ்க்கை நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கருணாகரச்சேரியில் சாலையை சீரமைக்க அடிக்கல்

கருணாகரச்சேரி வெற்றிநகா் தெரு சாலையை சீரமைக்க ரூ. 10 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடா்ந்து, சாலையை சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங... மேலும் பார்க்க