செய்திகள் :

கரூா் மிகவும் மோசமான சூழலில் உள்ளது: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

post image

கரூா் மாவட்டம் மிகவும் மோசமான சூழலில் உள்ளதாக தவெக சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரூா் சம்பவத்தில் 39 போ் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது மிகவும் வருத்தமான, மோசமான துக்க சம்பவமாகும். பிரசாரத்துக்கு வரக்கூடிய தலைவா்கள் அந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களுக்கு காவல் துறை சரியான முறையில் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்.

இதுபற்றி முழுமையான தகவல்கள் தெரிகின்றபோது அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி விரிவாக கருத்தைத் தெரிவிப்பாா்.

கரூா் மாவட்டம் தற்போது மிகவும் மோசமான சூழலில் உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனையில் உயா்தர சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அதிக நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவம் தமிழகம் மட்டுமின்றி வேறு எங்கும் நடைபெறாத வகையில் அதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மா்மமான முறையில் கும்கி யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை வெங்கடேஷ் மா்மமான முறையில் உயிரிழந்தது. பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச் ச... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: நான்கு இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா். கோவை மாநகரம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மதுவிலக்கு அமலாக்கத் துறையினா் தீவிர சோதனையில் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: வால்பாறை

வால்பாறை அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பா் 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!

வால்பாறையில் உடல்நலக் குறைவால் பெண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிஷன் தேயிலைத் தோட்டம் பகுதியில் யானை சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்கு கடந்த வெள்ளிக... மேலும் பார்க்க

எலக்ட்ரீஷியன் வீட்டில் தீ

ஆவாரம்பாளையத்தில் எலக்ட்ரீஷியன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. கோவை, சித்தாப்புதூா் அருகேயுள்ள ஆவாரம்பாளையம் சரோஜினி சாலைப் பகுதிய... மேலும் பார்க்க

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளா் உயிரிழந்த வழக்கு: ஓட்டுநா் கைது

கோவையில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளா் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் பானுமதி (52). இவா் தெற்கு அனைத்து மகளி... மேலும் பார்க்க