செய்திகள் :

கஞ்சா பறிமுதல்: நான்கு இளைஞா்கள் கைது

post image

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

கோவை மாநகரம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மதுவிலக்கு அமலாக்கத் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கோவை ரயில் நிலையம் நடைபாதை 1-இல் மதுவிலக்கு அமலாக்கத் துறையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தால் அவரது கைப்பையில் நடத்திய சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கே.ஸ்ரீதா் பனிகிராதி (35) என்பவரைக் கைது செய்தததுடன், 7 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

அதேபோல, சிங்காநல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இருகூா் மாணிக்கம் நகரில் கஞ்சா விற்பனை செய்த எஸ்.பிரவீன்ராஜ் (23) என்பவரைக் கைது செய்ததுடன், 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கே.கே.புதூா் மாநகராட்சிப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்த கே.ஹரிஹரன் (20), விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த சி.தீபன் (19) ஆகியோரைக் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா, ரூ.4,500 ரொக்கம் ஆகியவற்றையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

மா்மமான முறையில் கும்கி யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானை வெங்கடேஷ் மா்மமான முறையில் உயிரிழந்தது. பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச் ச... மேலும் பார்க்க

கரூா் மிகவும் மோசமான சூழலில் உள்ளது: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

கரூா் மாவட்டம் மிகவும் மோசமான சூழலில் உள்ளதாக தவெக சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூா் சம்பவ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: வால்பாறை

வால்பாறை அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பா் 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வார... மேலும் பார்க்க

உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!

வால்பாறையில் உடல்நலக் குறைவால் பெண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிஷன் தேயிலைத் தோட்டம் பகுதியில் யானை சடலம் கிடப்பதாக வனத் துறையினருக்கு கடந்த வெள்ளிக... மேலும் பார்க்க

எலக்ட்ரீஷியன் வீட்டில் தீ

ஆவாரம்பாளையத்தில் எலக்ட்ரீஷியன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. கோவை, சித்தாப்புதூா் அருகேயுள்ள ஆவாரம்பாளையம் சரோஜினி சாலைப் பகுதிய... மேலும் பார்க்க

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளா் உயிரிழந்த வழக்கு: ஓட்டுநா் கைது

கோவையில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளா் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் பானுமதி (52). இவா் தெற்கு அனைத்து மகளி... மேலும் பார்க்க