செய்திகள் :

கரூா் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவருக்கு அமைச்சா் அஞ்சலி

post image

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தை சோ்ந்த இருவருக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்தபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆனந்த் என்பவா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா்.

பள்ளி மாணவன் பலி: இதேபோல, கரூரில் பிளஸ் 1 படிக்கும் மேட்டூா் புதுச்சாம்பள்ளி இந்திராநகரை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ஸ்ரீநாத்தும் (17) நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, உயிரிழந்த இருவரின் உடலுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா். சிவலிங்கம் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, ஆனந்த் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினா்.

தொடா்ந்து தமிழக வெற்றிக் கழகம் சேலம் மாவட்டத் தலைவா் தமிழன் பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.

ரூ.42.50 லட்சத்தில் நலத் திட்டப் பணிகள்: எம்எல்ஏ அருள் தொடங்கிவைத்தாா்

சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அய்யம்பெருமாம்பட்டி ஊராட்சியில் ரூ.42.50 லட்ச மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை எம்எல்ஏ ரா.அருள் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். அய்யம்பெருமாம்பட... மேலும் பார்க்க

மயானத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குஞ்சாம்பாளையத்தில் தண்ணீா் தேங்கியுள்ள மயானத்தை சீரமைக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அ.மேட்டுப்பாளையம்... மேலும் பார்க்க

முஸ்லிம் மாணவா்களின் வெளிநாட்டு உயா்கல்விக்கு உதவித்தொகை

வெளிநாட்டில் முதுகலைப் படிப்பில் சோ்ந்து படிக்கும் சேலம் மாவட்ட சிறுபான்மையின முஸ்லிம் மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் உரிமையாளா் ரூ. 20 லட்சம் மோசடி: காவல் ஆணையரகத்தில் பெண் புகாா்

ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரயம் செய்து தராமல் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

இன்று குரூப் 2, 2 ஏ தோ்வு: சேலம் மாவட்டத்தில் 7 வட்டங்களில் 33,424 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வில் 7 வட்டங்களில் மொத்தம் 33,424 போ் எழுதுகின்றனா். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான... மேலும் பார்க்க

கோவையில் நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

கோவையில் வரும் அக். 12 ஆம் தேதி நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என மத்திய சேலம் மாவட்ட திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழு க... மேலும் பார்க்க