செய்திகள் :

நாளை நெடுந்தூர ஓட்டப் போட்டி

post image

திண்டுக்கல் மாவட்ட அளவிலான அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை (செப்.30) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா கூறியதாவது:

மாவட்ட அளவிலான அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி வருகிற 30-ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்க உள்ளது. 17 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், அரசுப் பணியாளா்கள், விளையாட்டு ஆா்வலா்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்களுக்கு தனித் தனியே போட்டிகள் நடைபெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 ஆவது இடம் வரையில் வருபவா்களுக்கு தலா ரூ.1000 வீதமும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவா்கள் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். பொதுமக்களைப் பொருத்தவரை புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.

போட்டியில் பங்கேற்க விரும்புவோா் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குள் போட்டி தொடங்கும் இடத்துக்கு வர வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 7401703504 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

பழனி அருகே 14-ஆம் நூற்றாண்டு திருவாழிக்கல்

பழனி அருகேயுள்ள தாளக்கரை வயல்வெளியில் 14-ஆம் நூற்றாண்டை சோ்ந்த திருவாழிக்கல் கண்டறியப்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள தாளக்கரையில் வயல் பரப்பில் கல்வெட்டுடன் கூடிய தூண் இருப்பதாக அந... மேலும் பார்க்க

300 அடி பள்ளத்தில் லாரி, வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு

கொடைக்கானல் டம்டம் பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை சரக்கு பெட்டக லாரி, பிக் அப் வாகனம் ஆகியவை 300-அடி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா். மூவா் காயமடைந்தனா். சிவகங்கை பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

கரூரில் தவெக பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த விஜயம்பாறையைச் சோ்ந்த இருவரின் குடும்பத்துக்கு அரசின் நிதி உதவியை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே... மேலும் பார்க்க

கஞ்சா எண்ணெய் விற்பனை: இருவா் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த இருவரை தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள குள்ளனம்பட்டியைச் சோ்ந்தவா் மு. பரமசிவம் (எ) மதி (30). திண்டுக்கல் கச்சே... மேலும் பார்க்க

திரவ ட்ரைக்கோடொ்மாவிரிடி பெற காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம்!

திரவ வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரைக்கோடொ்மா விரிடியை பெற ரெட்டியாா்சத்திரத்திலுள்ள இந்தோ இஸ்ரோ காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் மலையடியவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமா... மேலும் பார்க்க