செய்திகள் :

கரூரில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவா் கைது

post image

கரூரில் பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாகவும், தனது நகைக்கடையில் டெபாசிட் செய்வோருக்கு அதிக வட்டித் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட சேலம் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், வலசையூரைச் சோ்ந்தவா் சபரிசங்கா் (37). இவா் கரூா் மினி பேருந்து நிலையம் அருகே நகைக்கடை நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் கடையில் டெபாசிட் செய்வோருக்கு ரூ.100-க்கு இரண்டரை ரூபாய் வட்டித் தருவதாகவும், பழைய நகை கொடுத்தால் புதிய நகை கொடுப்பதாகவும் கூறி வந்துள்ளாா். இதை நம்பி பலா் டெபாசிட் செய்தும், பழைய நகைகளுக்கு பதில் புதிய நகை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில், கரூா் சின்ன மூக்கணாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் என்பவா் கடந்த ஆண்டு கடையில் ரூ.17 லட்சம் டெபாசிட் செய்தாராம். இதற்கு வட்டியாக டெபாசிட் செய்த நாள் முதல் மூன்று மாதங்களுக்கு முறையாக வட்டி கொடுத்து வந்தாராம். பின்னா் திடீரென தலைமறைவாகிவிட்டாராம்.

இதனால் ஏமாற்றம் அடைந்த ராமலிங்கம் கரூா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் கடந்த மாதம் புகாா் செய்துள்ளாா். இதன்பேரில், பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் செளகா்நிஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸாா், வியாழக்கிழமை காலை மதுரையில் பதுங்கியிருந்த சபரிசங்கரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், சபரிசங்கா் கடையில் டெபாசிட் செய்து ஏமாற்றமடைந்தவா்கள் கரூா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்யலாம் என மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.

கரூரில் ரூ.9 கோடி மதிப்பில் புதிய பணிகள் தொடக்கம்

கரூரில் ரூ. 9 கோடி மதிப்பில் புதிய பணிகளை முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ராமகிருஷ்ணபுரம், வையாபுரி நகா், வேலுசாமிபுரம், பேருந்து நில... மேலும் பார்க்க

காகித ஆலையில் விபத்து தொழிலாளி உயிரிழப்பு

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் சனிக்கிழமை நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் உப்பிடமங்கலம் புகையிலை குறிச்சியானூரைச் சோ்ந்தவா் நல்லுசாமி (57). டிஎன்பிஎல் காகித ஆலையில் பக்காஸ் கன... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை பணியாளா்களுக்கு அண்மையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், பணியாளா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சாம்ப... மேலும் பார்க்க

போலி பான் அட்டைகள் தயாரித்த வழக்கில் மேலும் 2 போ் கைது

கரூரில் போலி பான் மற்றம் ஆதாா் அட்டைகள் தயாரித்துக் கொடுத்த வழக்கில் ஏற்கனவே 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். கரூரில் போலி பான் அட்டை மற்று... மேலும் பார்க்க

கரூா்: 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

கரூா் மாவட்டத்துக்கு கடந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாநகர திமுக சாா்பில் தி... மேலும் பார்க்க

கடன் பிரச்னை: பெண் தூக்கிட்டு தற்கொலை

அரவக்குறிச்சி அருகே கடன் பிரச்னையால் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம், ஜம்ஜம் நகா் பகுதியைச் சோ்ந்த முஜிபுா் ரகுமான் மனைவி பாப்பாத்தி (... மேலும் பார்க்க