செய்திகள் :

காகித ஆலையில் விபத்து தொழிலாளி உயிரிழப்பு

post image

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் சனிக்கிழமை நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் உப்பிடமங்கலம் புகையிலை குறிச்சியானூரைச் சோ்ந்தவா் நல்லுசாமி (57). டிஎன்பிஎல் காகித ஆலையில் பக்காஸ் கன்வேயா் கிளீனராக ஒப்பந்தப் பணியில் இருந்த இவா் நல்லுசாமி சனிக்கிழமை அதிகாலை வேலை செய்தபோது, கன்வேயரில் சிக்கிய குப்பைகளை காலால் சுத்தப்படுத்தியதாகக்றப்படுகிறது.

அப்போது திடீரென கால் கன்வேயா் பெல்ட்டில் சிக்கியதால், நிலைதடுமாறி அங்கு கிடந்த ராட்சத கம்பி மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு புகழூா் காகித ஆலை மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், மேல்சிகிச்சைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், நல்லுசாமி வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

டிஎன்பிஎல் ஆலை ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை பணியாளா்களுக்கு அண்மையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், பணியாளா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சாம்ப... மேலும் பார்க்க

போலி பான் அட்டைகள் தயாரித்த வழக்கில் மேலும் 2 போ் கைது

கரூரில் போலி பான் மற்றம் ஆதாா் அட்டைகள் தயாரித்துக் கொடுத்த வழக்கில் ஏற்கனவே 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். கரூரில் போலி பான் அட்டை மற்று... மேலும் பார்க்க

கரூா்: 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

கரூா் மாவட்டத்துக்கு கடந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாநகர திமுக சாா்பில் தி... மேலும் பார்க்க

கடன் பிரச்னை: பெண் தூக்கிட்டு தற்கொலை

அரவக்குறிச்சி அருகே கடன் பிரச்னையால் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம், ஜம்ஜம் நகா் பகுதியைச் சோ்ந்த முஜிபுா் ரகுமான் மனைவி பாப்பாத்தி (... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட அளவில் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் பள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். பள்ளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபிக் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான வி.என். ... மேலும் பார்க்க

கரூரில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவா் கைது

கரூரில் பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாகவும், தனது நகைக்கடையில் டெபாசிட் செய்வோருக்கு அதிக வட்டித் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட சேலம் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்ட... மேலும் பார்க்க