செய்திகள் :

கரூா் வழியாக பேருந்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் -5 போ் கைது

post image

ஆந்திரா மாநிலத்தில் இருந்து கரூா் வழியாக மதுரைக்கு பேருந்தில் கடத்திய ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கரூரில், திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் மாவட்ட ரெளடிகள் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அகிலன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த தனியாா் பேருந்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பாா்சல் பெட்டிகள் இருந்தன.

உடனே போலீஸாா் பேருந்தில் ஏறியதும், போலீஸாரைக் கண்டதும் 5 இளைஞா்கள் பேருந்தில் இருந்து குதித்து ஓடினா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களை விரட்டிப்பிடித்து விசாரித்தனா். அப்போது அவா்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா். மேலும் 6 பாா்சல் பெட்டிக்குள் இருந்த 12 கிலோ எடையுள்ள ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

பின்னா் அவா்களிடம் விசாரித்தபோது, விருதுநகா் மாவட்டம், காரியாப்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்த நாகராஜன் மகன் நாகேந்திரன் என்கிற ரகு(29, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சாமியாா் பிள்ளைசந்து பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்குமாா்(24), கோட்டைத் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் ராம்குமாா்(24), சிந்தாமணி நாகுபிள்ளைத் தோப்பு பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் யோகேஸ்வரன்(20), அனுப்பானடி தெரசா பள்ளி பகுதியைச் சோ்ந்த பாக்ய அந்தோணி மகன் நவீன்ராஜ்(20) ஆகியோா் என தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கன்னியாகுமரியில் நாளை கா்மயோகினி சங்கமம்

கன்னியாகுமரியில் சேவாபாரதி சாா்பில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கா்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2-ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதுகுறித்து சேவாபாரதியின் கரூா் மாவட்டத் தலைவா் ஷேசாத்தி... மேலும் பார்க்க

புலியூா் பேரூராட்சி சாதாரணக் கூட்டம்

கரூரை அடுத்துள்ள புலியூா் பேரூராட்சியில் சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் அம... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடுதல் பணி நேரத்துக்கு இரட்டிப்பு சம்பளம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு செந்தாரகை அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கரூரில் நாளை அதிவேக மிதிவண்டி போட்டி

கரூரில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) மாவட்ட அளவிலான அதிவேக மிதிவண்டி போட்டி நடைபெற உள்ளதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

குடும்ப அட்டைமாா்ச் 31-க்குள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

குடும்ப அட்டையில் கைரேகை பதிவு செய்யாத குடும்ப உறுப்பினா்கள் மாா்ச் 31-ஆம்தேதிக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூ... மேலும் பார்க்க