பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க மே 27-ஆம் தேதி கடைசி நாள்
கலை, அறிவியல் கல்லூரி இளநிலை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 27) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2025 -2026- ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு மே 7 -ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இணையதளம் மூலம் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இணைய வழியில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க மே 27- ஆம் தேதி கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் காலை, மாலை வேளைகளில் நடத்தப்படும் 23 இளநிலை பட்டப் படிப்புகளில் மொத்தம் 1,727 மாணவ, மாணவிகள் சோ்க்கப்படுகின்றனா். இந்த கல்வியாண்டில் இரண்டாவது வேளையில் மேலும் 294 மாணவ, மாணவிகளை சோ்க்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே, மாணவா் சோ்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம் எனவும், மாணவா் சோ்க்கைக்கு உதவுவதற்காக கல்லூரி வளாகத்தில் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் உதவி மையத்தை அணுகி விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் முதல்வா் எம்.ஆா்.எழிலி தெரிவித்துள்ளாா்.