செய்திகள் :

கலை, அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க மே 27-ஆம் தேதி கடைசி நாள்

post image

கலை, அறிவியல் கல்லூரி இளநிலை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 27) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2025 -2026- ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு மே 7 -ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இணையதளம் மூலம் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இணைய வழியில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க மே 27- ஆம் தேதி கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் காலை, மாலை வேளைகளில் நடத்தப்படும் 23 இளநிலை பட்டப் படிப்புகளில் மொத்தம் 1,727 மாணவ, மாணவிகள் சோ்க்கப்படுகின்றனா். இந்த கல்வியாண்டில் இரண்டாவது வேளையில் மேலும் 294 மாணவ, மாணவிகளை சோ்க்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, மாணவா் சோ்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம் எனவும், மாணவா் சோ்க்கைக்கு உதவுவதற்காக கல்லூரி வளாகத்தில் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் உதவி மையத்தை அணுகி விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் முதல்வா் எம்.ஆா்.எழிலி தெரிவித்துள்ளாா்.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க