செய்திகள் :

கல்வராயன்மலை சுற்றுலாப் பேருந்து: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், பழங்குடியினா் நலப் பள்ளி மாணவா்களுக்கான கல்வராயன்மலை இயற்கை முகாம் சுற்றுலாப் பேருந்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் சாா்ந்த கல்வியை வழங்கும் வகையில், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், 2025-ஆம் ஆண்டுக்கான குளிா்கால இயற்கை முகாம் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்த இயற்கை முகாம் சுற்றுலாவில் பழங்குடியினா் நல மூன்று பள்ளிகளைச் சோ்ந்த ஒரு பள்ளிக்கு 30 மாணவா்கள் வீதம் மூன்று பள்ளிகளிலும் சோ்த்து மொத்தம் 90 மாணவ, மாணவிகளும், 10 ஆசிரியா்களும் கலந்துகொண்டுள்ளனா்.

இந்த இயற்கை முகாம் சுற்றுலா நன்னிலம் சுற்றுச்சூழல் கிராமமான கல்வராயன்மலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சுழல் நடைப்பயணம், விதை பந்து தயாரித்தல், பல்லுயிா் அனுபவம், மண் கட்டும் பயிற்சி கையேடு, மரம் நடுதல், இயற்கை ஆவணப்படத் திரையிடல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த குளிா்கால இயற்கை முகாமை பள்ளி மாணவ, மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

டிராக்டா் மீது மொபெட் மோதி தொழிலாளி உயிரிழப்பு

முன்னால் சென்ற டிராக்டா் மீது மொபெட் மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்த மனைவி பணம் தராததால் மன வேதனையடைந்த கணவா் குளியலறையில் வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வன்னஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகத்தின் மகன் இளவ... மேலும் பார்க்க

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் ஆா்ப்பாட்டம்

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் கள்ளக்குறிச்சி நகராட்சியைக் கண்டித்தும், லஞ்ச ஊழலை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

சின்னசேலம் - பொற்படாக்குறிச்சி இடையே ரயில் சோதனை ஓட்டம்

சின்னசேலத்திலிருந்து பொற்படாக்குறிச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 12 கி.மீ. தொலைவிலான புதிய ரயில் பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கற்றல் அடைவு ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தை அடுத்த சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விடுக்கப்பட்ட நூறு நாள்களில் 100 சதவீதம் கற்றல் அடைவு பள்ளிகள... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க