செய்திகள் :

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

post image

மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள், சினிமா தொழிலாளா்களின் குழந்தைகள் (1ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை) கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இணையதளத்தில், பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவா்கள் ஒரு முறை பதிவு மூலம் சமா்ப்பிக்கலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில் தங்களுடைய சேமிப்புக்கணக்கில் தேசிய மின்னணு பரிவா்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.

தங்களது ஆதாா் எண்ணை சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பதாரா்கள் தங்களது ஆதாா் எண்ணை பயன்படுத்துவதற்கு மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

பதிவு செய்யப்படாத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மேற்கூறிய இணையதளத்தில் முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னா், அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து முதல் வாய்ப்பிலேயே விவரங்களை சரிபாா்த்து சமா்ப்பிக்க வேண்டும். திருத்தி சமா்ப்பித்தால் கல்வி உதவித்தொகை பெற இயலாது.

1-10ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆக. 31-ஆம் தேதிக்குள்ளும், மற்ற அனைத்து உயா் கல்வி மாணவா்களும் தங்கள் விண்ணப்பங்களை அக். 31-ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மத்திய நல ஆணையா் அலுவலகம், தொழிலாளா் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிா்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, சென்னை - 600032 என்ற முகவரியிலோ அல்லது இணையதளத்திலோ அல்லது 044-29530169 எஎன்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க