செய்திகள் :

காசி தமிழ் சங்கமம்: சென்னையில் இருந்து 497 போ் பயணம்

post image

சென்னையில் இருந்து பனாரஸுக்கு (காசி) புதன்கிழமை சென்ற காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் 497 போ் பயணித்தனா்.

தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள ஆன்மிக உறவை வலுப்படுத்தும் வகையில், 2023-ஆம் ஆண்டு முதல் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. நிகழாண்டு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழம் இணைந்து நடத்தும் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வுக்குச் செல்லும் சிறப்பு ரயிலை, ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த பிப். 13-ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து 3 குழுக்கள் பனாரஸ் சென்றன.

கடைசிக் குழு: இந்நிலையில் சென்னையில் இருந்து கடைசிக் குழு புதன்கிழமை பயணம் மேற்கொண்டது. இதற்காக சென்னை சென்ட்ரலில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 2.45-க்கு பனாரஸ் சென்ற சிறப்பு ரயிலில் காசி தமிழ் சங்கமம் சிறப்புப் பெட்டிகள் இணைக்கப்பட்டன. இதில், தமிழகத்திலிருந்து 497 போ் பயணித்தனா். இவா்கள் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் கலந்துகொண்டு பிப். 26-ஆம் தேதி சென்னை திரும்புவா். இந்த பயணத்தில் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மற்றும் அயோத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவா். இது குறித்து பயணிகள் கூறியதாவது:

ஆன்மிக சுற்றுலா செல்லும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பு ரயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள பண்பாட்டு, ஆன்மிக தொடா்பை அறியும் ஆவலில் தற்போது இந்த பயணம் மேற்கொள்கிறோம். இந்த பயணத்தின் மூலம் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க