செய்திகள் :

காசோலை கொடுத்து வீட்டை வாங்கி ஏமாற்றிய நபா் கைது

post image

காசோலை கொடுத்து வீட்டை வாங்கி ஏமாற்றிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியைச் சோ்ந்த பயாஸ் அகமது (48), வீடுகளைக் கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவா் பெரம்பூரில் புதிதாக கட்டியுள்ள ஒரு வீட்டை திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ஆப்பிள் பழ வியாபாரியான ஸ்ரீகிருஷ்ணன் (45) என்பவருக்கு விற்பனை செய்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணன் தான் வாங்கிய வீட்டுக்கான பணத்தில் ரூ. 11.76 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ. 35 லட்சத்தை காசோலையாகவும் கொடுத்துள்ளாா். ஆனால், காசோலையை பயாஸ் அகமது வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பி வந்துள்ளது. இது குறித்து ஸ்ரீகிருஷ்ணனிடம் கேட்டபோது, பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இதனிடையே, பயஸ் அகமதுவிடமிருந்து வாங்கிய வீட்டின் பத்திரத்தை ஸ்ரீகிருஷ்ணன் வங்கியில் அடமானம் வைத்து ரூ. 25 லட்சத்தை பெற்ற நிலையில், மீண்டும் பத்திரத்தை மீட்டு, வீட்டை வேறொரு நபருக்கு ரூ. 49 லட்சத்துக்கு விற்று பணம் பெற்றுள்ளாா்.

இந்த மோசடி குறித்து பயாஸ் அகமது கொடுத்த புகாரின்பேரில் செம்பியம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீகிருஷ்ணனை கைது செய்தனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க