செய்திகள் :

காஞ்சிபுரம், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்!

post image

மானாம்பதி வானசுந்தரேஸ்வரர்

சோழர்கள் எழுப்பிய சிவாலயங்கள் ஏராளமானவை இந்த மண்ணில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் புனிதமானவை. புராணத் தொடர்பு கொண்டவை. அப்படிப்பட்ட தலங்களை தரிசிப்பதன் மூலம் அந்த ஆலயங்களுக்குச் சேவை செய்வதன் மூலம் பல்வேறு நலன்களை நாம் பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு தலம் தான் மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில்.

காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது உத்திரமேரூர். அங்கிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது மானாம்பதி கிராமம். காஞ்சிபுரத்திலிருந்து மேல்ரோடு வழியே உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளும், சென்னையிலிருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்துகளும் இந்த ஊர் வழியாகவே செல்கின்றன.

மானம்படி வான சுந்தரேஸ்வரர்
மானம்படி வான சுந்தரேஸ்வரர்

மானாம்பதி

ராஜேந்திர சோழன், கங்கையையும் கடாரத்தையும் வென்று, 'கங்கை கொண்டான்,' 'கடாரம் வென்றான்' என எல்லோராலும் போற்றப்பட்டான். வடக்கில் இருந்து சைவர்களை அழைத்து வந்து, தொண்டை மண்டலம் என்று சொல்லப்படும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அங்கே குடியமர்த்தினான். அந்த ஊருக்குத் தன் தாயாரின் நினைவாக, வானவன்மாதேவிபுரம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.

அத்துடன், அங்கே அழகிய சிவாலயம் ஒன்றையும் கட்டினான். அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடுகள் நடத்தப்படவும் வேதங்கள் ஓதப்படவும் நிவந்தங்களை எழுதிவைத்தான். அத்தகைய பெருமை மிகு ஆலயமே மானம்பதி ச்ரி வானசுந்தரேஸ்வரர் ஆலயம். இதற்கு சான்றாக இங்கே ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. வானவன் மாதேவிபுரமே பிற்காலத்தில் மருவி மானாம்பதி ஆனது என்கிறார்கள்.

செல்வம், செல்வாக்கு சேரும்

நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வேதியர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு அங்கே வீடுகள் கட்டிக் கொடுத்து, வேத பாடசாலையும் அமைத்துக் கொடுத்தான் ராஜேந்திர சோழன் என்கிறது கல்வெட்டுக் குறிப்பு. இதனால், அந்த ஊர் வானவன்மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டதாம்.

இந்திரன் தன் ஆணவத்தால் சூரபத்மனால் தோற்கடிக்கப்பட்டு சிறைப்பட்டான். இதனால் அவனது இந்திரப் பதவி பறிபோனது. பிறகு முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை சிறைமீட்டார். என்றாலும் இந்திரப்பதவியை இந்திரனால் மீண்டும் பெற முடியவில்லை.

அப்போது அவன் துயர்தீர்க்கும் தலம் எது என்று தேடி அலைந்தான். பிறகு முனிவர்கள் வழிகாட்ட இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டான். இங்குள்ள தீர்த்தக் குளம் மிகவும் புனிதமானது. இதில் நீராடி ஈசனை வழிபட்ட இந்திரனுக்கு ஈசன் காட்சி கொடுத்ததோடு அவன் இழந்த இந்திரப் பதவியையும் கொடுத்தார்.

எனவே இந்தத் தலத்துக்கு ஈசனை வழிபட்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு சேரும் என்பது நம்பிக்கை.

மானம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்
மானம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்

ஸ்ரீவானசுந்தரேஸ்வரர் - பெரியநாயகி

இங்கே, சுவாமிக்கு ஸ்ரீவானசுந்தரேஸ்வரர் என்பது திருநாமம். தாயார் பெரியநாயகி என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். இருவரும் கருணைக் கடல்களாக இங்கே காட்சிகொடுக்கிறார்கள். குறிப்பாக பெரியநாயகி அம்பிகையின் சந்நிதியில் நின்று வழிபட்டாலே மன நிம்மதியும் ஆறுதலும் கிடைக்கிறது என்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் மகா கணபதி, ஆறுமுக சுவாமி, தட்சிணாமூர்த்தி, சண்டீஸ்வரர், பிரம்மா, துர்கை, பைரவர், நாயன்மார்கள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. தைப்பூசம், மாசிமகம் முதலானவை இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக தைப்பூசம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த 10 கோயில்களின் தெய்வங்களும் தைப்பூச உற்சவ காலத்தில் இங்கே எழுந்தருள்கிறார்கள் என்பது சிறப்பு.

அத்தனை தெய்வங்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வ்தால் மனமும் சிந்தையும் மகிழ்வதோடு புண்ணிய பலன்களும் அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட பழைமையும் பெருமையும் வாய்ந்த சோழமன்னர்கள் வழிபட்ட மானாம்பதி ஸ்ரீவானசுந்ரேஸ்வரரை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று தரிசியுங்கள். உங்கள் பிரச்னைகளைத் தீர்த்து பிரகாசமான எதிர்காலத்தைத் தருவார் அந்த ஈசன்.

புதுக்கோட்டை புல்வயல் பாலதண்டபாணி திருக்கோயில் : சங்கடம் தீர்க்கும் குமரமலை சங்கு தீர்த்தம்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதற்கேற்ப தமிழகத்தின் மலைத்தலங்கள் பலவற்றிலும் முருகப்பெருமானின் திருக்கோயில்கள் பல அமைந்துள்ளன. மலைகளில் சிறந்தது பழநி மலை என்பார்கள். அந்த... மேலும் பார்க்க

ஆரணி, ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர்: ராமாயணத் தலம்; குழந்தை பாக்கியம் அருளும் 6 திங்கட்கிழமை வழிபாடு

ராமாயணத்தோடு தொடர்புடைய பல்வேறு தலங்கள் நம் தமிழ்நாட்டில் உண்டு. தசரத மகாராஜா தனக்குப் புத்திர பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்ட்டி என்னும் யாகத்தைச் செய்தார் என்கிறது ராமாயணம். அந்த அற்புத நிகழ்வு நிக... மேலும் பார்க்க

பணகுடி ஸ்ரீராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்: பச்சைப்புடவை சாத்தினால் திருமணவரம் தரும் சிவகாமி அம்பிகை!

நம் தேசமெங்கும், ராமபிரான் தன் அவதாரத்தின்போது சிவபூஜை செய்த தலங்கள் ஏராளம் உள்ளன. அவ்வாறு ஸ்ரீ ராமர் வழிபட்ட சுவாமியை ராமநாதசுவாமி, ராமலிங்கசுவாமி என்று அடையாளப்படுத்தி ஆலயம் அமைத்து வழிபட்டுவருகிறார... மேலும் பார்க்க

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடி: மாங்கல தோஷம் தீரும், சர்வ மங்கலங்களும் கைகூடும்!

மாங்கல்ய பாக்கியம் அருளும் தலங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது திருமங்கலங்குடி. இத்தலம் காவிரி வடகரைத் தலங்களில் 38-வது தலமாகும். இத்தலத்தினை அப்பர் மற்றும் சம்பந்தர் பாடியுள்ளனர். இந்த அற்பு... மேலும் பார்க்க

சபரிமலை வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு - பம்பாவில் இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கிறார்!

ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசிக்க உள்ளதாக கடந்த மே மாதம் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களால் ஜனாதிபதி சபரிமலை வருகை ரத்துச் செய்யப்... மேலும் பார்க்க

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில்: பூ வாக்குக் கேட்டுத் தொடங்கினால் சுபிட்சம் பெருகும்!

கோட்டை மாரியம்மன்கோட்டை மாரியம்மன் என்றதும் பலரின் நினைவுக்கும் வருவது திண்டுக்கல் மற்றும் சேலத்தில் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோயில்கள்தாம். ராணுவக் கோட்டைகளாக இருந்த இடத்தில் எழுந்தருளி இருக்கும் ... மேலும் பார்க்க