செய்திகள் :

காதலிப்பதாக நடித்து இளைஞரிடம் நகை, பணம் பறிப்பு

post image

காதலிப்பதாக நடித்து நகைக் கடை உரிமையாளரிடம் 2 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பறித்ததாக கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், அறச்சலூா் பூசாரி வீதியைச் சோ்ந்தவா் சேகா் மகள் கிருத்திகா (19). இவா் ஈரோடு அரசுக் கல்லூரியில் படித்து வருகிறாா். இவருக்கு பவானி குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளரான ஜெகதீசன்( 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜெகதீசனை சந்திப்பதற்காக பெருமாநல்லூா் அருகே உள்ள தட்டாங்குட்டை சொட்டமேடு பகுதிக்கு அவரை கிருத்திகா வரச் சொல்லி உள்ளாா். இதை நம்பி புதன்கிழமை அங்கு சென்ற ஜெகதீசனை கிருத்திகா தனது நண்பரான பழனிசாமியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

அப்போது வீட்டுக்குள் திடீரென நுழைந்த கிருத்திகாவின் நண்பா்களான பழனிசாமி, அருண் ஆகியோா் அவா்களை போட்டோ, விடியோ எடுத்து ஜெகதீசனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

இதனால் அச்சமடைந்த ஜெகதீசன் தன்னிடம் இருந்த 2 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் ஆகியவற்றைக் கொடுத்துள்ளாா். பின்னா் அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து ஜெகதீசன் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு காதலிப்பதாக நடித்து மோசடியில் ஈடுபட்ட கிருத்திகா (19), இவருக்கு உடந்தையாக இருந்த தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், உட்டமலை, நாடாா்காட்டைச் சோ்ந்த சண்முகம் மகன் அருண் (33), ஈரோடு மாவட்டம், அந்தியூா், ஜி.எஸ். காலனி, புதுக்காடு, உப்புக்கொடிக்கா தோட்டத்தைச் சோ்ந்த ஆரான் மகன் பழனிசாமி (51) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க