செய்திகள் :

காரைக்குடி: "மேயரை மாற்ற வேண்டும்" - திமுக துணை மேயர் தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் மனு

post image

காரைக்குடி மேயர் முத்துதுரைக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேயர் முத்துதுரை
மேயர் முத்துதுரை

வரி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளால் மதுரை மாநகராட்சியில் பொறுப்பு வகித்த 5 மண்டலத் தலைவர்களை, திமுக தலைமை ராஜினாமா செய்ய வைத்துள்ளதுடன், மேயரையும் மாற்ற உள்ளதாகப் பரவி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் காரைக்குடி மாநகராட்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் சிவகங்கை மாவட்ட திமுகவில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

காரைக்குடி துணை மேயரும், திமுக நகரச் செயலாளருமான குணசேகரன் தலைமையில் திமுக மாமன்ற உறுப்பினர்களுடன் காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து மேயர் முத்துதுரைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

காரைக்குடி நகராட்சி சேர்மனாக இருந்த முத்துதுரை, மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்பு மேயராகப் பொறுப்பு வகிக்கிறார்.

முத்துதுரைக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும்கட்சி உறுப்பினர்களாலும் நீண்டகாலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அமைச்சர் பெரியகருப்பனின் ஆதரவாளர் என்பதால் கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

மேயர் முத்துதுரை

இந்த நிலையில் காரைக்குடி மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று காலை தொடங்கியது. 36 உறுப்பினர்கள் கொண்ட மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தை துணை மேயர் குணசேகரன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 22 பேர் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

அதன் பின்பு துணை மேயர் குணசேகரன் தலைமையில் 22 மாமன்ற உறுப்பினர்கள், மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் குணசேகரன், "இது காரைக்குடி மாநகராட்சி நலனுக்காக கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த முடிவு. மேயர் அவருடைய வார்டைத் தவிர எந்த வார்டுக்கும் நிதி ஒதுக்குவதில்லை.

கவுன்சிலர்களை மிகவும் மோசமாக நடத்துகிறார். மரியாதையாகப் பேசுவதில்லை. அதனால், அவரை மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துள்ளோம். இப்போது 22 பேருடன் இன்னும் 2 கவுன்சிலர்களும் கையெழுத்திட உள்ளார்கள்." என்றார்.

இந்த சம்பவம் சிவகங்கை மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ளிகளில் சேர்ப்பு

சீனா நாட்டின் அதிகாரத்தின் கீழ் திபெத் இருந்து வருகிறது.அதன் பிடியிலிருந்து வெளியேற திபெத் முயன்று வருகிறது... போராடி வருகிறது.இந்த நிலையில், திபெத்தியன் ஆக்‌ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது... மேலும் பார்க்க

பாமக: "என்னுடைய X, Facebook கணக்குகளை மீட்டுத் தாருங்கள்" - டிஜிபி-யிடம் ராமதாஸ் மனு

'பாமகவின் தலைவர் நானே' என்று கடந்த மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால், பாமக நிறுவனத் தலைவரும், பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணிக்கு மோதல் போக்குத் தொடங்கியது.ராமதாஸ், தேர்த... மேலும் பார்க்க

``75 வயதாகிவிட்டால் ஒதுங்கியிருக்க வேண்டும்..." - மோகன் பகவத் பேச்சுக்கு காங்கிரஸின் ரியாக்‌ஷன்?

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ``உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டது என்றால், நீங்கள் உங்கள் பொறுப்பில... மேலும் பார்க்க

மதிமுக: ``8 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால்..." - தொகுதிப் பங்கீடு குறித்து துரை வைகோ!

சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிமுக வைகைச்செல்வன் வைகோவை `வைகோ பொய்கோ' என விமர்சித்தது உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்கு திருச்சி எம்.பி-யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான... மேலும் பார்க்க