செய்திகள் :

கால்நடை மருத்துவக் கல்லூரியில் உயா்கோபுர மின் விளக்கு திறப்பு

post image

நாமக்கல் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உயா்கோபுர மின்விளக்கு வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17.50 லட்சத்தில் பொரசபாளையம், மஞ்சநாயக்கனூா், புள்ளகுமரன்பாளையம், லத்துவாடி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, வெள்ளாளப்பட்டி (ஆண்டாபுரம்)ஆகிய இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகளை அமைத்துள்ளாா்.

இதற்கான திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் மின் விளக்கு பெயா்பலகையை திறந்துவைத்தாா். நிகழ்வில், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் செல்வராஜ், கொமதேக மாநில ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் ஆா்எஸ்ஆா்.மணி, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், பொருளாளா் சசிகுமாா், அவைத் தலைவா் பழனிமலை, மகளிரணி செயலாளா் பிரேமலதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நாமக்கல்லில் நாளை தவெக தலைவா் விஜய் பிரசாரம்: புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல்லில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் ச... மேலும் பார்க்க

செப்.30 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் செப்.30-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுக் கல்லூரியில் சுற்றுலா தின விழா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, ‘சுற்றுலாவும்-சுற்றுச்சூழல் பாதுகாப்பும்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் நாளை நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை (செப்.27) நடைபெறுகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் விழா காலங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க