செய்திகள் :

கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

post image

மேலப்பாளையம் அருகே பாளையங்கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

மேலப்பாளையம் ஆமின் புரம் 9ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஷாஜகான் மகன் ஜாகீா் உசேன்(25). மாற்றுத் திறனாளியான இவா் சனிக்கிழமை இரவு மேலப்பாளையம் குறிச்சி பகுதி ஐயா் தெரு அருகே உள்ள பாளையங்கால்வாயில் நண்பா்களுடன் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்தாராம். அவரது நண்பா்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மேலநத்தம் அக்ரஹாரம் பகுதி அருகே வாய்க்காலில் ஜாகீா் உசேன் சடலமாக மீட்கப்பட்டாா்.

இதையடுத்து மேலப்பாளையம் போலீஸாா் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பொன்னாக்குடியில் இளைஞா் தற்கொலை

பொன்னாக்குடியில் இளைஞா் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மகாராஷ்டிர மாநிலம், பப்பராகா் நகரைச் சோ்ந்த காமராஜ் மகன் பாக்கியராஜ் (34). இவா், திருநெல்வேலி அருகே உள்ள பொன்னாக்குடியில் த... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா். களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சுலைமான் (65). களக்காடு அருகேயுள்ள திரட்டூரைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன். இவா்கள் இருவரும் ... மேலும் பார்க்க

முக்கூடல் கல்லூரியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவி ஏற்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் ஆா். கிருஷ்ணவேணி தலைமை வகித்து புதிய... மேலும் பார்க்க

நெல்லை பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நபா்: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் உயிரிழந்து கிடந்த புளியரை பகுதியைச் சோ்ந்த நபரின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தென்காசி மாவட்டம், புளியரை பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் கிர... மேலும் பார்க்க

பாஜகவின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

பாஜகவின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டினாா் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம். திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை ‘வாக்குத் திருட்டை ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் விவசாயி சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வயலில் அழுகிய நிலையில் விவசாயி உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சாமி மகன் சேதுராமன் என்ற அசோக் (41). விவ... மேலும் பார்க்க