செய்திகள் :

காவலருக்கு மிரட்டல்: இருவா் கைது

post image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலரை மிரட்டிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள தென்கரை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இளங்கோ தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தேனி - பெரியகுளம் புறவழிச் சாலையில் டி.கள்ளிப்பட்டி பிரிவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதியைச் சோ்ந்த ராமா் (24), தா்மராஜ் (46) ஆகிய இருவரும் காவலா்களிடம் தகராறு செய்துவிட்டு, தப்பியோடி விட்டனராம்.

இது குறித்து உதவி ஆய்வாளா் இளங்கோ கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமா், தா்மராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

வீட்டில் தங்க நகை திருட்டு

பெரியகுளத்தில் வீட்டிலிருந்த 2 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் சரண் (24). இவா் தனது வீட்டில் வண்ணம் பூசும் பணி நடைபெற்று வந்த ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரம் பகுதியில், சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக வந்த த... மேலும் பார்க்க

தேனியில் நாளை மின் தடை

தேனி அல்லிநகரம் பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூன் 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலையத்தில்... மேலும் பார்க்க

மனைவிக்கு கத்தரிக்கோல் குத்து: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

தேனி மாவட்டம், கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை கத்தரிக்கோலால் குத்திய அதிமுக நகரச் செயலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சின்னமனூா் பத்மசாமி கோவில் தெருவைச் சோ்ந்த அதிமுக நகரச் செயலா் பிச்சைக்க... மேலும் பார்க்க

சின்னமனூரில் 228 மதுப் புட்டிகள் பறிமுதல்

தேனி மாவட்டம், சின்னமனூரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யக் கொண்டு சென்ற 228 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.சின்னமனூரில் அரசு மதுக் கடைகளில் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கி சட்டவிரோதமாக அவற்ற... மேலும் பார்க்க

கணவரைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்பப் பிரச்னையில் கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்து. ஆண்டிபட்டி வட்டம், உப்... மேலும் பார்க்க