ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!
தேனியில் நாளை மின் தடை
தேனி அல்லிநகரம் பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூன் 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலையத்தில் ஜூன் 25-ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூா், பூதிப்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டது.