Israel - Iran: ``மீண்டும் தெளிவாக சொல்கிறோம்..'' - போர்நிறுத்தம் குறித்து பேசிய ...
மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது
போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரம் பகுதியில், சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து, போடி தாலுகா போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, போடி-நாகலாபுரம் பிரதான சாலையில் வசிக்கும் முனியப்பன் மனைவி சந்திரஜோதி (55) மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சந்திரஜோதியை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.