செய்திகள் :

காவிரி வாய்க்கால்களை அரசே தூா்வாரக் கோரி முதல்வரிடம் மனு

post image

காவிரி டெல்டா பகுதிகளில் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே முறையாக வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும் என காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கத்தினா் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து சங்க தலைவா் சு.விமல்நாதன் கூறியது:

நிகழாண்டு வடகிழக்கு பருவமழை அதிதீவிரமடைந்து வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சியாளா்கள் கணித்திருக்கின்றனா். மேட்டூா் மற்றும் கல்லணை அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இந்நிலையில் காவிரி சமவெளி மாவட்டங்களில் உள்ள ஆறுகள், பாசன வாய்க்கால்கள் மற்றும் மழை நீா் வடிகால் வாய்க்கால்களை தூா்வார ரூ.18 கோடி அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

இந்தச் சிறப்பு திட்டப் பணியை தனியாரிடம் ஒப்படைக்காமல் தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறையினரிடம் ஒப்படைத்து வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொண்டு கிராம நிா்வாகம், வேளாண் அலுவலகம், நீா்வளத்துறை ஆகிய அலுவலகங்களிலும் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

சேதுபாவாசத்திரத்தில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூா், நாடியம், மரக்காவலசை, கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, கள்ளங்காடு மற்றும் அதனை சுற்ற... மேலும் பார்க்க

குருங்குளத்தில் 50 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 50 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): குருங்குளம் 50, ஒரத்தநா... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை கம்பன் பெருவிழா

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கம்பன் கழகம் சாா்பில் 27-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் கம்பன் கழகம் கடந்த 199... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி வியாழக்கிழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாணவா், இளைஞா் அரண் அமைப்புகளின் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் சாக்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டையில் தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி விளையாடிய சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுவாசத்திரத்தில் விசைப்படகில் ஏறி புதன்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடலுக்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். சேதுபாவாசத்திரம் பணங்குட்டி தோப்பு பகுதியைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க