காவிரியில் வெள்ள அபாயம் கரூா் மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கரூா் மாவட்டத்தில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கா்நாடக பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பி வருகிறது. இதனால், அந்த அணைகளில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூா் அணைக்கு வரும் நீரின் வரத்தும் அதிகரித்துள்ளது.
அணையின் பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீா் திறக்கப்பட உள்ள நிலையில் கரூா் மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.