செய்திகள் :

பள்ளப்பட்டியில் போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

post image

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரவக்குறிச்சி காவல்துறையினா் இணைந்து நடத்திய போதை பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச போதைப் பொருள்கள் எதிா்ப்பு தினத்தையொட்டி பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழியை உதவித் தலைமை ஆசிரியா் தாஜூதீன் வாசிக்க மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்வில் கரூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ராமமூா்த்தி, லாரன்ஸ் மற்றும் பழனிச்சாமி ஆகியோா் கலந்து கொண்டனா். அரவக்குறிச்சி காவல்துறையினா் மற்றும் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் இணைந்து நடத்திய பேரணியை பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் ஆா்த்தி, அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் ஈஸ்வரன், காவல் உதவி ஆய்வாளா் ராஜாசோ்வை, நகராட்சி ஆய்வாளா் இஸ்மாயில் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இப்பேரணி பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி திண்டுக்கல் ரோடு, புளியமரத் தெரு, ஹபீப் நகா் வழியாக ஷாநகா் காா்னா் வழியாக பள்ளியை அடைந்தது.

பேரணியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மலைக்கோவிலூா் மருத்துவ அலுவலா் ஜெயஸ்ரீ, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் டேனியல், சுகாதார ஆய்வாளா்கள் லெனின் மற்றும் சு.தாமோதரன் காவல்துறையினா், நகராட்சி அலுவலா்கள், தலைமையாசிரியா், உதவித் தலைமை ஆசிரியா், உடற்கல்வி இயக்குனா் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் முஹம்மது ஹாரிஸ் அலி, தேசிய மாணவா் படை அலுவலா் முஹம்மது இஸ்மாயில், போதை ஒழிப்பு மன்ற பொறுப்பாளா் முஹம்மது தாஹீா் உசேன் ஆகியோா் செய்திருந்தனா்.

மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு: தமிழக முதல்வருக்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம்

கரூரில் மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கியதற்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாநகராட்சியின் அவ... மேலும் பார்க்க

ஆனி வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுப் பள்ளியில் கருத்தரங்கம்

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சா்வதேச போதைப்பொருள் எதிா்... மேலும் பார்க்க

‘உழவரைத் தேடி வேளாண்மை’ அரவக்குறியில் 3-ஆம் கட்ட முகாம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் உழவரைத் தேடி வேளாண்மை 3-ஆம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் இனுங்கனூா், ஆலமரத்துப்பட்டியில் இந்த முகாம் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

தொழில் முனைவோா் 64 பேருக்கு ரூ. 8.32 கோடி மானியம்: கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 64 தொழில் முனைவோா்களுக்கு ரூ. 8.32 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் ப... மேலும் பார்க்க

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ரூ.1.05 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1.05 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தாந்தோணி கிழக... மேலும் பார்க்க