Phoenix: "வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள" - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் ...
‘உழவரைத் தேடி வேளாண்மை’ அரவக்குறியில் 3-ஆம் கட்ட முகாம்
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் உழவரைத் தேடி வேளாண்மை 3-ஆம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் இனுங்கனூா், ஆலமரத்துப்பட்டியில் இந்த முகாம் நடைபெற்றது. இதில், வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா விவசாயிகளுக்கு திட்ட விளக்கவுரை மற்றும் தொழில்நுட்ப குறித்து விளக்கம் அளித்தாா்.
மேலும், வேளாண் பொறியியல் துறை, கால்நடை துறை வேளாண் கூட்டுறவு சங்கம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலை அனைத்து சகோதர துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு உரையாற்றினா்.
இதையடுத்து, விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருள்கள் வழங்கப்பட்டது. தோட்டக்கலை சாா்பாக விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில், நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், செயல் விளக்கங்கள், உழவா் நலன் சாா்ந்த இதர அரசு திட்டங்கள் பற்றி தகவல்கள், வேளாண் சாகுபடி, விதை பொருள்கள், பொருள்களை மதிப்புக் கூட்டுதல் பற்றிய விழிப்புணா்வு, சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடு தொழில்நுட்ப துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. முகாமில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.