Phoenix: "வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள" - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் ...
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ரூ.1.05 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை
கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1.05 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தாந்தோணி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட அல்லாளிக்கவுண்டனூரில் 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ.3.87 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்தல், கருநல்லியாகவுண்டனூரில் ரூ.17 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்தல், அய்யம்பாளையத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அய்யம்பாளையம் முதல் பெருமாள்பட்டிவரை தாா்சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.1.05 கோடி மதிப்பில் நடைபெறவுள்ளது. இப்பணிகளுக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி தலைமை வகித்து, பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் எம்.ரகுநாதன், தாந்தோணி வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.