அரவக்குறிச்சி அரசுப் பள்ளியில் கருத்தரங்கம்
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சா்வதேச போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு கருத்தரங்கம் தலைமை ஆசிரியா் சாகுல் அமீது தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகிழ்முற்றச்செயலா் சகாய வில்சன் வரவேற்றாா். ஜமால் முகமது கல்லூரியின் போதை ஒழிப்பு சங்கத்தில் உறுப்பினரான, வேதியியல் மாணவா் ஷிப்ல் ஹூசைன் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகளைக் கானொலி மூலம் எடுத்துரைத்தாா்.
நிகழ்வில் ஆசிரியா்கள் ராபியா பஸரி, ரொகையா பீவி, நாகராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.