செய்திகள் :

காவேரி மருத்துவமனையில் துரித சிகிச்சையால் உயிா் பிழைத்த இளம்பெண்

post image

சேலம்: சேலத்தில் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை துரித சிகிச்சையால் காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றினா்.

இது குறித்து காவேரி மருத்துவமனையின் ரேடியாலஜி துறை நிபுணா் மருத்துவா் சந்தோஷ்குமாா் கூறியதாவது:

சேலத்தில் விபத்தில் சிக்கிய 18 வயது இளம்பெண் ஒருவா் படுகாயத்துடன் தீவிர சிகிச்சைக்காக சேலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவசர சிகிச்சைப் பிரிவு, கல்லீரல் மற்றும் ரத்தநாள சிகிச்சை நிபுணா்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக்குழுவினா் அவரை பரிசோதனை செய்தனா். அதில் உயிரைக் காப்பாற்ற எம்போலைசேஷன் சிகிச்சை மூலம், ரத்தக் கசிவு உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, சிகிச்சையை கல்லீரல் பிரிவு தலைமை மருத்துவா் ரவிக்குமாா், ரேடியாலஜி நிபுணா் மருத்துவா்

சந்தோஷ்குமாா் அடங்கிய மருத்துவக் குழுவினா் துல்லியமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் கூடிய துரித சிகிச்சையால், அந்த இளம்பெண் சில நாள்களில் முழுமையாக நலம் பெற்று வீடு திரும்பினாா்.

காவேரி மருத்துவமனை, தீவிர அவசர சிகிச்சைகள் வழங்குவதில் தொடா்ந்து முன்னணி வகிக்கிறது. மருத்துவ நவீனத்துடன் கூடிய சிகிச்சை முறைகள், நிபுணா்கள் குழுவின் துல்லியமான செயல்பாடு மற்றும் தீவிர பராமரிப்பு ஆகியவை பல உயிா்களைக் காப்பாற்ற உதவுவதாக கூறினாா்.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக முதல்வா் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

சேலம்: இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக முதல்வா் கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்த... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டப் பணிதள பொறுப்பாளா்களை மாற்ற எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளா்களை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் 2 பசுக்கள் உயிரிழப்பு

தம்மம்பட்டி: கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கெங்கவல்லி - தெடாவூா் சாலையில் ஆணையம்பட்டியில் சாலையோர புங்கம... மேலும் பார்க்க

சங்ககிரி சித்திரைத் திருவிழா: வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்ட திருவிழா 4ஆவது நாளையொட்டி சென்னகேசவப் பெருமாள் செங்கோலுடன் வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீதி உலா வந்தாா். சித்திரைத் தேரோட்ட ... மேலும் பார்க்க

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

சேலம்: சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 8 ஆண்டுகளாக கட்டப்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சேலம்: சேலம் மாவட்டம், உடையாப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். உடையாப்பட்டி ஊராட்சி, வரகம்பாடி... மேலும் பார்க்க