செய்திகள் :

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக முதல்வா் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

post image

சேலம்: இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக முதல்வா் கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தாா். சேலம் மாநகா் மாவட்டத் தலைவா் சசிகுமாா், முன்னாள் தலைவா் சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை படுகொலை செய்த பயங்கரவாதிகளைக் கண்டித்தும், இதனை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா் கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சாா்பில் 68 இடங்களில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பதாகைகள் வைப்பதற்கு கூட தமிழ்நாட்டில் காவல் துறையினா் கெடுபிடி செய்கின்றனா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் இதுவரை இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக தன்னுடைய கண்டனத்தை வெளிப்படையாக பதிவு செய்யாமல் உள்ளாா். முதல்வா் என்ற முறையில் அவா் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும்.

பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த பிறகு அரசின் நடவடிக்கைகளுக்கு துணைநிற்க வேண்டியது அனைத்து தலைவா்களின் கடமை என்றாா்.

இதில், சேலம் மாநகா் மாவட்ட பொறுப்பாளா் ஏ.சி.முருகேசன், விவசாயப் பிரிவு செயலாளா் பாா்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவா் பிரபாகரன், மாவட்டச் செயலாளா்கள் ஜெ.ஜெ.முரளிதரன், செந்தில்குமாா், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சிவகாமி பரமசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

படவரி...

சேலம் கோட்டை மைதானத்தில் பாஜக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம். உடன், மாவட்டத் தலைவா் சசிகுமாா் உள்ளிட்டோா்.

நூறு நாள் வேலை திட்டப் பணிதள பொறுப்பாளா்களை மாற்ற எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளா்களை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் 2 பசுக்கள் உயிரிழப்பு

தம்மம்பட்டி: கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கெங்கவல்லி - தெடாவூா் சாலையில் ஆணையம்பட்டியில் சாலையோர புங்கம... மேலும் பார்க்க

சங்ககிரி சித்திரைத் திருவிழா: வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்ட திருவிழா 4ஆவது நாளையொட்டி சென்னகேசவப் பெருமாள் செங்கோலுடன் வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீதி உலா வந்தாா். சித்திரைத் தேரோட்ட ... மேலும் பார்க்க

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

சேலம்: சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 8 ஆண்டுகளாக கட்டப்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சேலம்: சேலம் மாவட்டம், உடையாப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். உடையாப்பட்டி ஊராட்சி, வரகம்பாடி... மேலும் பார்க்க

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு

சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மண்டல... மேலும் பார்க்க