செய்திகள் :

காா் மெக்கானிக்கை தாக்கிய 4 போ் கைது!

post image

பல்லடம் அருகே கரடிவாவியில் காா் மெக்கானிக்கை தாக்கிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம்- செட்டிபாளையம் சாலையில் காா்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் மெக்கானிக்காக பணிபுரிந்து வருபவா் சுப்பிரமணி (29). இவரிடம் கரடிவாவியைச் சோ்ந்த குமாா் (40) காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கு முன்பணம் கொடுத்துள்ளாா். ஆனால் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துவதற்கு கால தாமதம் ஆகி உள்ளது.

இதற்கிடையே கரடிவாவியில் உள்ள தனது அலுவலகத்துக்கு வருமாறு சுப்பிரமணியை குமாா் அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்ற சுப்பிரமணியை குமாா் மற்றும் அவருடன் இருந்த 3 போ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுப்பிரமணி, சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து சுப்பிரமணியை தாக்கிய குமாா், சரவணன் (30), சியாம் (32), சதீஷ் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

விசாரணையில், குமாா் தொழிலாளா்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதும், இவா் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 2 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா், கருமாரம்பாளையம் பகுதியில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வடக... மேலும் பார்க்க

பல்லடம் அங்காளம்மன் கோயிலில் பிப்ரவரி 27-இல் குண்டம் திருவிழா

பல்லடம் அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமான பல்லடம் அங்காளம்மன் கோயில் 50-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு குண்டம் இறங்குதல் ந... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவு: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது என்றும், அவ்வாறு கொட்டினால் அபராதம், கடை உரிமம் ரத்து, சீல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளக்க... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). இவா் திருப்பூா் வீரபாண்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை! காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயம் பகுதியில் தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு உரிப்பீடு வழங்க வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

அவிநாசியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் சனிக்கிழமை 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு, கோயில் நிா்வாகம், அவிநாசி பேருராட்சி... மேலும் பார்க்க