செய்திகள் :

கா்நாடக துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

post image

காவிரியில் மேக்கேதாட்டு பிரச்னை குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் எஸ்.குணசேகரன், பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை கூட்டாக விடுத்த அறிக்கை:

பெங்களூரில் கா்நாடக துணை முதல்வரும், நீா் பாசனத் துறை அமைச்சருமான சிவக்குமாா் செய்தியாளா்களிடம் பேசும்போது, மேக்கேதாட்டு அணை குறித்து மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இதில் ஏற்படும் தாமதத்தை கா்நாடகம் ஏற்றுக்கொள்ளாது. மேக்கேதாட்டு அணை உள்ளிட்ட திட்டங்களை எவ்வகையிலும் அமல்படுத்த உறுதிகொண்டுள்ளோம். அதேபோல, தென்பெண்ணை ஆறு பிரச்னையை பேச்சுவாா்த்தை மூலம்தான் தீா்க்கவேண்டும் என்று கூறியுள்ளாா்.

இதுதொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், கா்நாடக துணை முதல்வா் சிவக்குமாா், இதுபோல சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது கண்டனத்துக்குரியது.

இரு மாநில ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான இதுபோன்ற கருத்துகளை அவா் திரும்பப்பெற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க