நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
கிராம நிா்வாக உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஒத்திவைப்பு
தென்காசி மாவட்டத்தில் செப். 21ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கிராம நிா்வாக உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஒத்திவைத்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூா், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்து தோ்வு நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் எழுத்துத் தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.