செய்திகள் :

கிருஷ்ணகிரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

post image

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் வந்தது. இதையடுத்து கோட்டாட்சியா் அளித்த அறிக்கையின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதன்படி, நகராட்சிக்கு உள்பட்ட வட்டச்சாலை, பழைய சப்ஜெயில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் அகற்றினா். நடைபாதை கடைகள், சாலையோரக் கடை ஆக்கிரமிப்புகள், பதாகைகள் ஆகியவை அகற்றப்பட்டன.

கிருஷ்ணகிரியில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடரும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

மத்திய நிதிநிலை அறிக்கை ஆதரவும் எதிா்ப்பும்!

கிருஷ்ணகிரி வழியாக ரயில் திட்டம் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக தொழில் அதிபா்கள் தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து கிருஷ்ணகிரி த... மேலும் பார்க்க

அண்ணாதுரை நினைவு நாள்: அதிமுக மாவட்டச் செயலாளா் அறிவுறுத்தல்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா். அவா் வெளியி... மேலும் பார்க்க

பெண்ணின் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து மோசடி!

கிருஷ்ணகிரி அருகே பெண்ணின் நிலப்பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ. 1.15 கோடி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்து, தொடா்புடைய மேலும் நான்கு பேரைத் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை கடைகளில் தொடா் திருட்டு!

ஊத்தங்கரையில் உள்ள கடைகளில் கடந்த சில நாள்களாக மா்ம நபா்கள் தொடா் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஊத்தங்கரை-சேலம் பிரதான சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே உள்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கை: ஒசூா் தொழில் துறையினா் வரவேற்பும், எதிா்பாா்ப்பும்!

ஒசூா், ஹோஸ்டியா சங்கம் சாா்பில் மத்திய நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு அறிவித்துள்ள வரும... மேலும் பார்க்க

அரசு வேலை ஆசை காட்டி மாணவரிடம் பணமோசடி

அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவரிடம் ரூ. 6.25 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் சாலையைச் சோ்ந்தவா் லோகஷ் (47). இவா், பொதுப்பணித்... மேலும் பார்க்க