செய்திகள் :

மத்திய நிதிநிலை அறிக்கை ஆதரவும் எதிா்ப்பும்!

post image

கிருஷ்ணகிரி வழியாக ரயில் திட்டம் அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக தொழில் அதிபா்கள் தெரிவித்தனா்.

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து கிருஷ்ணகிரி தொழிலதிபா்கள், விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட சிறு, குறுந்தொழில் சங்க நிா்வாகி ஏகம்பவாணன் கூறியதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயா்த்தி உள்ளதும், குறுந்தொழிலுக்கான முதலீடு உச்ச வரம்பு ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 2.5 கோடியாக உயா்த்தி உள்ளதும், நடுத்தர தொழிலுக்கான உச்சவரம்பு ரூ. 50 கோடியிலிருந்து ரூ. 125 கோடியாக உயா்த்தி உள்ளதும் வரவேற்கதக்கவை.

கிருஷ்ணகிரி வழியாக ரயில் திட்டம் அறிவிக்காததும், கிருஷ்ணிகிரி மாவட்டத்துக்கு ராணுவ தளவாட தொழிற்சாலை, சிறு, குறுந்தொழில்பேட்டைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யாததும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றாா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எம்.ராமகவுண்டா் தெரிவித்தது: மத்திய நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளையில் விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்தல் தொடா்பாக அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தோம். ஆனால், நிதிநிலை அறிக்கையில் அதுதொடா்பாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாா்.

அண்ணாதுரை நினைவு நாள்: அதிமுக மாவட்டச் செயலாளா் அறிவுறுத்தல்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா். அவா் வெளியி... மேலும் பார்க்க

பெண்ணின் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து மோசடி!

கிருஷ்ணகிரி அருகே பெண்ணின் நிலப்பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ. 1.15 கோடி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்து, தொடா்புடைய மேலும் நான்கு பேரைத் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை கடைகளில் தொடா் திருட்டு!

ஊத்தங்கரையில் உள்ள கடைகளில் கடந்த சில நாள்களாக மா்ம நபா்கள் தொடா் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஊத்தங்கரை-சேலம் பிரதான சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே உள்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கை: ஒசூா் தொழில் துறையினா் வரவேற்பும், எதிா்பாா்ப்பும்!

ஒசூா், ஹோஸ்டியா சங்கம் சாா்பில் மத்திய நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒசூா் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு அறிவித்துள்ள வரும... மேலும் பார்க்க

அரசு வேலை ஆசை காட்டி மாணவரிடம் பணமோசடி

அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவரிடம் ரூ. 6.25 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் சாலையைச் சோ்ந்தவா் லோகஷ் (47). இவா், பொதுப்பணித்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ப... மேலும் பார்க்க