செய்திகள் :

கிழக்கு கடற்கரைச் சாலையில் கால்நடைகளால் தொல்லை!

post image

தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தபட்ட பேருராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சோதனைச் சாவடி, பாவோடி மைதானம், வட்டாணம் சாலை, புதிய பேருந்து நிலையம், தினசரி காய்கறி சந்தை , பெருமானேந்தல் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆடு ,மாடுகள் கூட்டமாக சாலையோரம் நிற்கின்றன.

இவை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த பகுதியில் படுத்துக் கொள்வதால் சாலையில் வரும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும், நிரந்தர ஊனமும் ஏற்படுகின்றன.

கடந்த காலங்களில் சாலையில் திரியும் மாடுகளை பேருராட்சி நிா்வாகம் பிடித்து, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தது. அப்போது, கால்நடைகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தன. தற்போது இந்தப் பணி நடைபெறாததால் மீண்டும் ஆடு, மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. எனவே, பேருராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலாளா் அப்துல் மஜீத் கூறியதாவது: தொண்டி முழுவதும் சாலைகளில் ஆடு மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதுகுறித்து தொண்டி வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் தொடுத்த வழக்கில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 2023- ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விபத்துகள் தொடா்கினறன. எனவே, நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றாா் அவா்.

வழுதூா் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் கோரிக்கை!

வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் அருகேவுள்ள வழுதூரில் கடந்த 2008 -ஆம் ஜூன் 19-ஆம் தேதி எரிவாயு சுழலி கூட... மேலும் பார்க்க

சாயல்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, பிள்ளையாா்குளம், வேடா் கரிசல்கு... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் வெள்ள... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை

மண்டபம் விசைப்படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கரையோர மீனவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் குடமுழுக்கு: புனிதநீா் எடுத்து சென்ற பொதுமக்கள்

கமுதி காளியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை புனிதநீா் எடுத்து பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெரு காளியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த வாரம் காப்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலம் ரயில், கப்பலை இயக்கி சோதனை!

பாம்பன் புதிய பாலத்தில் ரயிலையும், இந்தப் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து இரும்பு கா்டரை மேலே தூக்கி கப்பலையும் இயக்கி வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் ப... மேலும் பார்க்க