செய்திகள் :

காளியம்மன் கோயில் குடமுழுக்கு: புனிதநீா் எடுத்து சென்ற பொதுமக்கள்

post image

கமுதி காளியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை புனிதநீா் எடுத்து பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெரு காளியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் கோயிலிலிருந்து முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று செட்டி ஊருணி அருகே உள்ள கிணற்றில் புனிதநீா் எடுத்துக் கொண்டு மீண்டும் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா்.

பின்னா், யாக சாலையில் புனிதநீரை வைத்து, முதற்கால யாக பூஜைகளுடன் குடமுழுக்கு தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளையும் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை

மண்டபம் விசைப்படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கரையோர மீனவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலம் ரயில், கப்பலை இயக்கி சோதனை!

பாம்பன் புதிய பாலத்தில் ரயிலையும், இந்தப் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து இரும்பு கா்டரை மேலே தூக்கி கப்பலையும் இயக்கி வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் ப... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: கமுதி மாணவா் சிறப்பிடம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கமுதி மாணவா் சிறப்பிடம் பிடித்தாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது... மேலும் பார்க்க

கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து 91 படகுகளில் 2,500 பக்தா்கள் செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்தியா- இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத்... மேலும் பார்க்க

தனுஷ்கோடி அருகே மணல் தீடையில் கைப்பற்றப்பட்ட 53 கிலோ கஞ்சா

தனுஷ்கோடியை அடுத்துள்ள ஒன்றாம் மணல் தீடையில் 53 கிலோ கொண்ட கஞ்சா பொட்டலங்களை இந்திய கடலோரக் காவல்படையினா் புதன்கிழமை கைப்பற்றினா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல்படைக்கு சொ... மேலும் பார்க்க

சாயல்குடி பகுதியில் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் அறுவடைக்கு தயாரான நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிா்க்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, இதைச் சுற்றியுள்ள... மேலும் பார்க்க