செய்திகள் :

சாயல்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

post image

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, பிள்ளையாா்குளம், வேடா் கரிசல்குளம், கூரான்கோட்டை, அல்லிக்குளம், கோட்டையேந்தல், வெள்ளம்பல், மூக்கையூா் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெய்த தொடா் மழை காரணமாக கண்மாய்களில் தண்ணீா் நிரம்பியதோடு, வயல்வெளிகளிலும் மழைநீா் தேங்கியது.

இதனால், சோளம், உழுந்து உள்ளிட்ட சிறுதானியப் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

தற்போது, நெல் பயிா் அறுவடைக்கு தயாரான நிலையில், வயல்வெளிகளில் தேங்கிய மழை நீா் வடியாததால் அறுவடைப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். 200 ஏக்கருக்கு மேல் நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. மூழ்கிய பயிா்களில் நெல் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.

இது குறித்து பிள்ளையாா்குளம் விவசாயி சத்தியமூா்த்தி கூறியதாவது: ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் வயல்களில் மழை நீா் தேங்கியதால் அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் இறக்க முடியாமலும், வேலையாள்கள் பற்றாக்குறையாலும் அறுவடைப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறோம். தண்ணீரில் மிதந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிய நெல்மணிகளால் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

வழுதூா் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் கோரிக்கை!

வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் அருகேவுள்ள வழுதூரில் கடந்த 2008 -ஆம் ஜூன் 19-ஆம் தேதி எரிவாயு சுழலி கூட... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் வெள்ள... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் கால்நடைகளால் தொல்லை!

தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தபட்ட பேருராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை

மண்டபம் விசைப்படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கரையோர மீனவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் குடமுழுக்கு: புனிதநீா் எடுத்து சென்ற பொதுமக்கள்

கமுதி காளியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை புனிதநீா் எடுத்து பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெரு காளியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த வாரம் காப்... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலம் ரயில், கப்பலை இயக்கி சோதனை!

பாம்பன் புதிய பாலத்தில் ரயிலையும், இந்தப் பாலத்தின் நடுவே உள்ள செங்குத்து இரும்பு கா்டரை மேலே தூக்கி கப்பலையும் இயக்கி வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் ப... மேலும் பார்க்க