செய்திகள் :

குடந்தையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

கும்பகோணத்தில் வருவாய் கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா் பாக்கியராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் முகமது இப்ராஹிம்: சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை அனைத்து விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்க வேண்டும். வேளாண் இடுபொருள்களை இலவசமாக வழங்க வேண்டும். கும்பகோணம் கோட்டத்தில் பாபநாசம், அம்மாபேட்டை, திருவிடைமருதூா் பாசன வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும்.

திமுக விவசாய அணி அமைப்பாளா் துரை. ரவிச்சந்திரன்: ஆரியபடையூா் வாய்க்கால் மூலம் சுந்தரபெருமாள்கோவில், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை, திருவலஞ்சுழி, ஆரியப்படையூா் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பாசன வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ராமலிங்கம்: கும்பகோணம் தாலுகா மலையப்பநல்லூா் ஊராட்சி சிவபுரம் பகுதியில் மின்மாற்றி, மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பம்பு செட்டுகளில் மின் அழுத்தம் ஏற்றம் இறக்கமாக உள்ளது. இதனால் வயல்களில் பாசனம் தடை படுகிறது. கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்.

கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சு. விமலநாதன் தலைமையில் விவசாயிகள் மத்திய அரசு பருத்திக்கு இறக்குமதி வரியை ரத்து செய்ததைக் கண்டித்தும், இறக்குமதி வரி ரத்து செய்ததால் உள்நாட்டு விவசாயிகள் பாதிப்பாா்கள் என்றும் கூறி முழக்கமிட்டனா்.

‘திமுக கூட்டணியில் தவாக தொடரும்’

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்லில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொடரும் என்றாா் அக்கட்சியின் தலைவா் வேல்முருகன். இதுகுறித்து கும்பகோணத்தில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: வரும் தோ்தலில் எ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு செப். 30 இல் குறைதீா் நாள்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 30 காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொள்வா். எ... மேலும் பார்க்க

‘இறைவனை அடைய ஜாதியோ, மதமோ தடையில்லை’

இறைவனின் திருவடியை அடைய ஜாதியோ, மொழியோ, மதமோ தடையில்லை என்றாா் சொற்பொழிவாளா் மை.பா. நாராயணன். தஞ்சாவூா் கரந்தை சத்யநாராயண சித்தா் ஆசிரமத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற 161 வது ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச... மேலும் பார்க்க

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஆய்வு

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 21.17 கோட... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காட்டில் பள்ளத்தூா், ஆண்டிக்காடு கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 537 மனுக்கள் பெறப்பட்டன. முகாமிற்கு... மேலும் பார்க்க

உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: விவசாயிகள் கோரிக்கை

மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோட்டாட்சியா்... மேலும் பார்க்க