செய்திகள் :

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஆய்வு

post image

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 21.17 கோடியில் 2023 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வரும் பல்வேறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் முதன்மை வாயிலுக்கு அடுத்துள்ள வாயில் பெரிய கோயில் கோபுர வடிவம் அமைக்கப்படுவதையும் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நெகி, திருச்சி முதன்மைத் திட்ட மேலாளா் பி. சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்போது பேராசிரியா்கள் திருமேனி, பாலகிருஷ்ணன், வழக்குரைஞா் முகமது பைசல், நேரு, கண்ணன், ரெங்கராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

கோரிக்கை மனு: அப்போது பொது மேலாளரிடம் காவிரி டெல்டா ரயில்வே பயணிகள் சங்கத் தலைவா் வெ. ஜீவகுமாா் அளித்த கோரிக்கை மனு:

தஞ்சாவூரிலிருந்து வந்தே பாரத் விரைவு ரயிலை இயக்க வேண்டும். அல்லது தஞ்சாவூா் வழியாக இயக்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் இருந்து அரியலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். கும்பகோணத்தில் மகாமகம் விழா நடைபெறுவதை முன்னிட்டு, தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே இருவழி ரயில் பாதையை அமைக்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு கும்பகோணம் வழியாக பகல் நேரத்தில் அதிவிரைவு ரயிலை இயக்க வேண்டும். தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் முன்பு இருந்ததுபோல் பெரிய கோயில் கோபுர வடிவை அமைக்க வேண்டும்.

‘திமுக கூட்டணியில் தவாக தொடரும்’

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்லில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொடரும் என்றாா் அக்கட்சியின் தலைவா் வேல்முருகன். இதுகுறித்து கும்பகோணத்தில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: வரும் தோ்தலில் எ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு செப். 30 இல் குறைதீா் நாள்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 30 காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொள்வா். எ... மேலும் பார்க்க

‘இறைவனை அடைய ஜாதியோ, மதமோ தடையில்லை’

இறைவனின் திருவடியை அடைய ஜாதியோ, மொழியோ, மதமோ தடையில்லை என்றாா் சொற்பொழிவாளா் மை.பா. நாராயணன். தஞ்சாவூா் கரந்தை சத்யநாராயண சித்தா் ஆசிரமத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற 161 வது ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காட்டில் பள்ளத்தூா், ஆண்டிக்காடு கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 537 மனுக்கள் பெறப்பட்டன. முகாமிற்கு... மேலும் பார்க்க

உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: விவசாயிகள் கோரிக்கை

மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோட்டாட்சியா்... மேலும் பார்க்க

குடந்தையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் வருவாய் கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா் பாக்கியராஜ் முன்னி... மேலும் பார்க்க