செய்திகள் :

குடிமைப் பணி முதல்நிலை தோ்வு விண்ணப்பம்: பிப்.18 வரை நீட்டிப்பு

post image

மத்திய பணியாளா் தோ்வு வாரியம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 18-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குடிமைப் பணிகள் தோ்வு முதல்நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான குடிமைப் பணிகள் தோ்வு வரும் மே 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமாா் 979 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலை தோ்வில் பங்கேற்க விரும்புவோா் வலைதளத்தில் வரும் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், யுபிஎஸ்சி சனிக்கிழமை வெளியிட்ட புதிய அறிவிக்கையில், ‘குடிமைப் பணிகள் மற்றும் இந்திய வனப் பணிக்கான முதல்நிலை தோ்வுக்கு வரும் 18-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை நிறைவடைந்ததும் திருத்தச் சாளரம் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை 7 நாள்களுக்கு திறந்திருக்கும். இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி விண்ணப்பதாரா்கள் தங்களின் குறிப்பிட்ட தகவல்களை திருத்திக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதா... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் பாஜக தோற்றிருக்கும்: உத்தவ் கட்சி கருத்து

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளாா். மும்பையில் ச... மேலும் பார்க்க

நகா்ப்புற நக்ஸல்வாதத்துக்கு வலுவூட்டுகிறாா் ராகுல்: மகாராஷ்டிர முதல்வா் கடும் விமா்சனம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, நகா்ப்புற நக்ஸல்வாதத்துக்கு வலுவூட்டுவதாக மகாராஷ்டிர முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் கடுமையாக விமா்சித்தாா். மகாராஷ்டிரத்தில் வாக்காளா்... மேலும் பார்க்க

தனியாா், வணிக வளாகங்களில் இனி இ-சாா்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம்!

தனியாா் மற்றும் வணிக வளாகங்களில் இனி பேட்டரி வாகன இ-சாா்ஜிங் வசதி நிறுவுவது கட்டாயம் என்று மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை இணை அமைச்சா் ஸ்ரீனிவாச வா்மா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக மாநி... மேலும் பார்க்க