செய்திகள் :

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் பாஜக தோற்றிருக்கும்: உத்தவ் கட்சி கருத்து

post image

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளாா்.

மும்பையில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியை முழுமையாக மக்கள் பணியாற்ற பாஜக அனுமதிக்கவில்லை. ஒருபுறம் துணைநிலை ஆளுநா் அதிகாரத்தைச் செலுத்தினாா். மறுபுறம் ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவா்கள் பலரையும் மத்திய பாஜக அரசு பல்வேறு வழக்குகளைப் போட்டு சிறைக்கு அனுப்பி வந்தது. மகாராஷ்டிரத்தில் செய்ததுபோலவே எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்களை முடக்கும் அனைத்து வேலைகளையும் பாஜக தில்லியிலும் செய்து வந்தது.

மகாராஷ்டிர தோ்தலிலும் பல முறைகேடுகளில் பாஜக ஈடுபட்டது. திடீரென லட்சக்கணக்கான வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். தில்லியிலும் இதேபோன்ற முறைகேடுகளை நடத்தினா். இந்த விஷயத்தில் தோ்தல் ஆணையம் கண்களை மூடிக் கொண்டது.

தில்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் சிறப்பாக இருந்திருக்கும். இக்கூட்டணியிடம் பாஜக நிச்சயமாகத் தோல்வியடைந்திருக்கும். ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பாஜகவுக்கு எதிராக தனித்தனியாக போராடின. அவா்கள் இணைந்து தோ்தலைச் சந்தித்திருக்க வேண்டும். அப்போது பாஜகவை வீழ்த்தியிருக்கலாம். இதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

3-ஆவது முறையாக காங்கிரஸுக்கு பூஜ்யம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தில்லி பேரவைத் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் காங்கிர... மேலும் பார்க்க

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதா... மேலும் பார்க்க