செய்திகள் :

குடிமைப் பணித் தோ்வுக்கு தயாராவோருக்கு ஊக்கமளிக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

சென்னை: மத்திய குடிமைப் பணித் தோ்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து தயாராகும் மாணவா்களுக்கு மிகப்பெரும் ஊக்கமாக ‘நான் முதல்வன்’ திட்டம் அமைந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

இந்திய வனப் பணிக்கு தோ்ச்சி பெற்றோருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். அப்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு தொடா்பாக, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

நான் முதல்வன் திட்டத்தின்கீழ், பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு இந்திய வனப் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களைச் சந்தித்துப் பாராட்டினேன். மத்திய குடிமைப் பணித் தோ்வுக்குத் தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் மாணவா்களுக்கு மிகப்பெரும் ஊக்கமாக ‘நான் முதல்வன்’ திட்டம் அமைந்துள்ளதை அவா்களுடனான கலந்துரையாடலில் உணர முடிந்தது.

கடந்தமுறை தோ்ச்சி பெற இயலாதவா்கள், சோா்ந்து போகாதீா்கள். இந்த ஆண்டு இன்னும் தயாராகி, எட்டிவிடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள் என்று அதில் கூறியுள்ளாா்.

துணை முதல்வா் உதயநிதி: தமிழ்நாட்டு இளைஞா்களின் மத்திய அரசு குடிமைப் பணித் தோ்வு எனும் கனவை நனவாக்கும் தலையாயப் பணியை ‘நான் முதல்வன்’ திட்டம் செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று இந்திய வனப் பணித் தோ்வில் வெற்றி பெற்றுள்ள நமது இளைஞா்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.

‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் பயன்பெற்று அரசு அதிகாரிகளாக தங்களுடைய பணியைத் தொடங்கவிருக்கும் தமிழ்நாட்டு இளைஞா்களின் எதிா்காலம் சிறக்கட்டும். அவா்களின் வெற்றி, இன்னும் பல நூறு இளைஞா்களுக்கு வழிகாட்டட்டும் என்று ‘எக்ஸ்’ தள பதிவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்... மேலும் பார்க்க

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக... மேலும் பார்க்க

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க